கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

384 0

கொழும்பு துறைமுக வளாகத்தில் நேற்று பிற்பகல் பாரந்தூக்கி இயந்திரமொன்று உந்துருளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ரிதிகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுக வளாகத்தின் மூன்றாம் கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த குறித்த பாரந்தூக்கி இயந்திரம், முன்பக்கத்திலிருந்து அதேதிசையில் சென்று கொண்டிருந்த உந்துருளி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உந்துருளியைச் செலுத்தி சென்றவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய பாரந்தூக்கி இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கரையோர பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் பத்து பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.!

Posted by - February 19, 2026 0
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 10 தமிழக மீனவர்களை எதிர்வரும் மார்ச் 05, 2026 வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று…

தையிட்டி திஸ்ஸ விகாரை விடயம்: பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமாக செயற்படுகிறது – பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு.!

Posted by - February 21, 2026 0
தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பான காணி விவகாரத்தில் பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமான முறையில் செயற்படுகின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக…

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை: காணிகள் விடுவிப்பதில் இழுபறி.!

Posted by - February 20, 2026 0
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பாக, கொழும்பில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைத் தொடங்கியபோதும், காணிகளை விடுவிப்பதில் இழுபறி தொடர்ந்து வருகிறது. ஜனாதிபதி அநுர…

எவரையும் கைவிடாத செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் – புதுடில்லியில் அநுர அதிரடிப் பிரகடனம்

Posted by - February 19, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லியில் நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நெறிமுறைகள் மற்றும்…

கரைத்துரைப்பற்று பிரதேச சபை தொடர்பில் தமிழரசுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!

Posted by - February 19, 2026 0
முல்லைத்தீவு மாவட்டம், கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை நீக்கி, அதற்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தடுக்கக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *