நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து .!

166 0

நேபாளத்தில் போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.நேபாளத்தில் இன்று (23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்த பேருந்தில் பயணிகள் 44 பேர் இருந்தனர்.

பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டர்.இந்த விபத்தில் பயணிகள் 17 பேர் உயிரிழந்ததுடன் அவர்களில் ஆறு பெண்கள் மற்றும் பதினொரு ஆண்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் 8 பெண்கள், 18 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 27 பேர் காயமடைந்தனர். இவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். பஸ் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்துள்ளது.

இதேவேளை, நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது எனவும் வாகனம் ஓட்டுபவர் , தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Post

ஐக்கிய நாடுகள் சபைக்கு 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ள அமெரிக்கா!

Posted by - February 20, 2026 0
ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களில் சுமார் 160 மில்லியன் டொலர்கள் செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனீவாவில் இடம்பெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தை!

Posted by - February 23, 2026 0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற கூடிய இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.இதன்படி, ஜெனீவா நகரில் எதிர்வரும் 26-ஆம் திகதி…

மலேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

Posted by - February 23, 2026 0
மலேசியாவின் சபா மாநிலக் கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட…

மத்திய கிழக்கில் பதற்றம்: ஜேர்மன் படைகள் எர்பில் நகரிலிருந்து தற்காலிக விலகல்.!

Posted by - February 20, 2026 0
மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான பதற்றம் அதிகரிப்பதால், ஜேர்மனி தனது படைகளின் அளவைக் குறைக்கும் முடிவெடுத்துள்ளது. குர்திஸ்தான் பகுதியிலுள்ள ஈராக்கின் தலைநகரான எர்பில் நகரில் ஜேர்மன் ராணுவம்…

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் தற்காலிக வரி அதிகரிப்பு!

Posted by - February 23, 2026 0
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி வீதத்தை மேலும் ஐந்து வீதத்தால் அதிகரிக்க அமெரிக்கா ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.இதற்கமைய, குறித்த வரியின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *