எவரையும் கைவிடாத செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் – புதுடில்லியில் அநுர அதிரடிப் பிரகடனம்

389 0

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லியில் நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நெறிமுறைகள் மற்றும் மனிதக் கவனத்துடன் முன்னெடுக்கப்படுவதை இலங்கை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.


இந்த ஆரம்ப நிகழ்வில் நரேந்திர மோடி, இம்மானுவேல் மக்ரோன், லூலா டி சில்வா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.ஜனாதிபதி, AI தொழில்நுட்பம் இலங்கை தனித்து மட்டுமல்ல, பிராந்திய பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பு மூலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறிப்பாக, மையப்படுத்தப்பட்ட மொழி தரவுத்தொகுப்புகள், பொதுவான மதிப்பீட்டு முறைகள், பாதுகாப்புக் கருவிகள் மற்றும் கூட்டுத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகிய நான்கு அடிப்படை விடயங்களை முன்மொழிந்தார்.அவரது கருத்துப்படி, AI தொழில்நுட்பம் சில மொழிகள் மற்றும் கலாசாரங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டால், இலங்கையின் தனித்துவமான கலாசார பன்முகத்தன்மை இழக்கப்படும் அபாயம் உள்ளது.

அதற்காக உள்ளூர் மொழிகளை டிஜிட்டல் மயப்படுத்தி AI கட்டமைப்பில் ஒருங்கிணைப்பது அவசியமாகும்.மேலும், இலங்கையில் தொழில்நுட்ப அறிவு கொண்ட இளம் மனித வளம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், டேட்டா பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்புக்கான சட்ட கட்டமைப்புகள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும், இந்தியா போன்ற நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பான பிராந்திய AI தரவு மையங்களை உருவாக்க இலங்கை தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

Related Post

கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

மாகாண சபைத் தேர்தலை காலதாமதமின்றி நடத்துங்கள் – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
ஐக்கிய தேசியக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ, மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து ஆராய விசேட நாடாளுமன்றத்…

கஞ்சாவுடன் குடும்பப் பெண் கைது.!

Posted by - February 20, 2026 0
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர், தனது வீட்டில் விற்பனை நோக்கத்திற்காக கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக கைது…

இந்தியா விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர நாடு திரும்பினார்.!

Posted by - February 21, 2026 0
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது உத்தியோகபூர்வ இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நேற்று…

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி

Posted by - February 16, 2026 0
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *