மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த இளம் மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி (31) அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
காரைதீவுவைச் சேர்ந்த இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக கடமையாற்றி வந்தார். சுகயீனம் காரணமாக அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (20) அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகம் மருத்துவ பீடத்தில் தனது மருத்துவப் பட்டப்படிப்பை (MBBS) நிறைவு செய்த அவர், பின்னர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பணியாற்றி, அதன் பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேவையாற்றி வந்தார்.அம்பாறை காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்டு, மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்த திறமையான இளம் மருத்துவரின் திடீர் மறைவு பிரதேச மக்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
