பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, தனது முதல் சிம்பொனியான ‘வேலியன்ட்’ எனும் இசை படைப்பை சென்னையில் மே 30ஆம் தேதி நேரடியாக அரங்கேற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் நடைபெற்ற இந்த சிம்பொனி நிகழ்ச்சி, ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடாத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சிக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம், ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனி இசை எழுதி அதை நேரடியாக அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை இளையராஜா பெற்றார்.
இந்நிலையில், ‘வேலியன்ட்’ சிம்பொனி இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ‘ஃபிரம் ராஜா வித் லவ்’ என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சர்வதேச மற்றும் உள்நாட்டு இசைக்கலைஞர்கள் இணைந்து நேரடியாக இசை வழங்கவுள்ளனர்.நிகழ்ச்சி நடைபெறும் துல்லியமான இடம் உள்ளிட்ட மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
