வடக்கு மாகாணத்தில் ‘நிழல் அமைச்சர்கள்’ நியமனம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.!

242 0

வடக்கு மாகாண சபை இயங்காமல் இருக்கின்ற நிலையில், மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு துறைக்கும் நிழல் அமைச்சர்களை நியமித்து ஆட்சி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். இதன்போது, வடக்கு மாகாணத்தில் நிழல் அமைச்சர்களை நியமித்து அவர்கள் ஊடாக ஆட்சியைக் கொண்டுநடத்துமாறு அவர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.

சுகாதாரத்துறைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜாவும், கல்வி அமைச்சுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனும், மகளிர் விவகாரத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனும், உள்ளூராட்சி சபைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும், விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சு சார்பான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா அதில் அழைக்கப்பட்டிருந்தார். எந்த அடிப்படையில் அவரை அழைத்தீர்கள்? அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைத்திருக்க வேண்டும். அதைவிடுத்து, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகக் கேவலமான மனோநிலை.

வடக்கு மாகாண சபைக்கு எதிரானவர்கள் என்றும், அந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடி உயிர்த் தியாகம்கூட செய்தவர்கள் எனவும் கூறுகின்றீர்கள். ஆனால், அதே மாகாண சபைக் கட்டமைப்பில் திருட்டுத்தனமாக உங்களின் ஆட்களைப் புகுத்துகின்றீர்கள். இதுவொரு முதுகெலும்பில்லாத பண்பு. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என அரசைக் கோருகின்றோம்.” – என்றார்.

Related Post

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

Posted by - February 16, 2026 0
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) இலங்கை வந்தடைந்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக…

சர்வதேச தாய்மொழி தினம்: மட்டக்களப்பில் அனைத்தின மக்களின் உணவு கண்காட்சி.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்புவில் இன்று (21) சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சி நடைபெற்றது.“உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல்” என்ற…

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

Posted by - February 16, 2026 0
இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு…

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி

Posted by - February 16, 2026 0
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை…

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து அறிவிப்பு

Posted by - February 16, 2026 0
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *