மனைவியை கொ*லை செய்த கணவன்.!

268 0

காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 32 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை, குறித்த பெண்ணுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டு முற்றத்தில் வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேகநபர், இன்று வெள்ளிக்கிழமை (20) உடுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Post

கந்தரே பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 21, 2026 0
மாத்தறை, கந்தரே பிரதேசத்தில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி இலங்கையில்: பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து உயர்மட்டச் சந்திப்பு.!

Posted by - February 21, 2026 0
இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி, நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
மஹியங்கனை – மெதஓயா பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) மதியம் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.…

மன்னாரில் தொடரும் நகை அபகரிப்பு – பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

Posted by - February 21, 2026 0
மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று (21) காலை கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பின்னர் அவர்கள் மன்னார் மாவட்டச் செயலகம்…

நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்.!

Posted by - February 19, 2026 0
நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து பொதுமக்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *