மீனவர்களுக்கு மீன்பிடி வலைத் தொகுதி வழங்கும் நிகழ்வு.!

297 0

மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களில் தெரிவு செய்யப்பட்ட 36 மீனவர்களுக்கு மீன்பிடி வலை தொகுதி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (19) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தில் இடம்பெற்றது.

மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு உதவித் திட்டங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மீனவர்களுக்கான புதிய வலை உபகரணங்கள் வழங்கும்போது அவை கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதி பெற்றவையாக இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு சேதங்கள் கணக்கிடப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டைனமைட் (வெடிபொருள்) பயன்படுத்தி மீன்பிடித்த இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று இரண்டு நபர்கள் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு இந்திய இழுவைப் படகுகள் 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

சுற்றுச்சூழல் மற்றும் மீன் வளப் பாதுகாப்பு கருதி உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இது குறித்து மீனவர் சங்கங்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் பாரம்பரிய முறையில் கைகளால் வலை இழுக்க அனுமதி உண்டு. ஆனால் இயந்திரங்கள் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும். இது குறித்து மீனவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரி கேட்டுக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 36 மீனவர்களுக்கு குறித்த வலைத்தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post

தனியார் சுற்றுலா பேருந்து – இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்.!

Posted by - February 20, 2026 0
இலங்கை காவல் துறை தெரிவித்ததன்படி, யட்டியாந்தோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட தணகொலவத்த பகுதியில் தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இன்று (20) மாலை…

வாழைச்சேனையில் கைப்பற்றப்பட்ட பெருமளவான சட்டவிரோத மதுபானம்!

Posted by - February 19, 2026 0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வருடங்களாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை கிழக்கு மாகாண பொலிஸ்…

மீண்டும் ஒரு இருண்ட காலம் உருவாக இடமளிக்காதீர்கள் – மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு கோடீஸ்வரன் எம்.பி. கடும் எதிர்ப்பு.!

Posted by - February 21, 2026 0
இலங்கையில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை மீண்டும் ஒருபோதும் உருவாகக் கூடாது எனவும், அதனைத் தடுக்கும் வகையில் அரசு…

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் வழக்கில் நீதி கோரி வடமராட்சியில் ஆர்ப்பாட்டம்.!

Posted by - February 21, 2026 0
பருத்தித்துறை பகுதியில் இன்று (21.02.2026) நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் காண்பவர்கள் அனைவரையும் கலங்கடித்தது.2007.02.15 அன்று யாழ்ப்பாணம் கலிகைச் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன்…

இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை.!

Posted by - February 20, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *