சர்வதேச தாய்மொழி தினம்: மட்டக்களப்பில் அனைத்தின மக்களின் உணவு கண்காட்சி.!

190 0

மட்டக்களப்புவில் இன்று (21) சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சி நடைபெற்றது.
“உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல்” என்ற தொனிப்பொருளில், இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகம் அரசடி பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.


கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மட்டக்களப்பில் வாழும் அனைத்து இன மக்களின் பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.இந்நிகழ்வு பேராசிரியர் சி. ஜெய்சங்கர் அவர்களின் ஒழுங்கமைப்பிலும், கிழக்கு பல்கலைக்கழக மத்திய நிலைய பணிப்பாளர் டாக்டர் அருளானந்தம் அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பி. பிரதீபன் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.


மூத்தோரின் நினைவுகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் உருவான பாரம்பரிய, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் வேடுவ சமூகம், இஸ்லாமிய சமூகம், இந்து சமூகம், பறங்கி சமூகம் மற்றும் சிங்கள சமூகம் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் பண்டைய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.பெருமளவான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.

Related Post

முச்சக்கரவண்டி – நோயாளர் காவு வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து.!

Posted by - February 21, 2026 0
அக்குரஸ்ஸ மாத்தறை பிரதான சாலையில் பரதுவ கோட்டா போதி அருகே பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நோயாளர் காவு வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்து இன்று (21)…

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் வழக்கில் நீதி கோரி வடமராட்சியில் ஆர்ப்பாட்டம்.!

Posted by - February 21, 2026 0
பருத்தித்துறை பகுதியில் இன்று (21.02.2026) நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் காண்பவர்கள் அனைவரையும் கலங்கடித்தது.2007.02.15 அன்று யாழ்ப்பாணம் கலிகைச் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன்…

மருத்துவத்துறையில் எட்டு தங்கப்பதக்கங்களை பெற்ற மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் .!

Posted by - February 19, 2026 0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார். யாழ்.பல்கலைக்கழகப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட…

மூலோபாய முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகை!

Posted by - February 16, 2026 0
சுற்றுலா, உற்பத்தி மற்றும் வேளாண் துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நிதி, பொருளாதார…

சிவனடிபாத மலையில் உள்ள வனப் பகுதியில் திடீர் தீப்பரவல்.!

Posted by - February 19, 2026 0
இன்று சிவனடிபாத மலை உச்சிக்கு முன்னால் அமைந்துள்ள வனப் பகுதியில் இன்று (19) திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. நிலவும் கடும் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *