சர்வதேச தாய்மொழி தினம்: மட்டக்களப்பில் அனைத்தின மக்களின் உணவு கண்காட்சி.!

184 0

மட்டக்களப்புவில் இன்று (21) சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சி நடைபெற்றது.
“உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல்” என்ற தொனிப்பொருளில், இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகம் அரசடி பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.


கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மட்டக்களப்பில் வாழும் அனைத்து இன மக்களின் பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.இந்நிகழ்வு பேராசிரியர் சி. ஜெய்சங்கர் அவர்களின் ஒழுங்கமைப்பிலும், கிழக்கு பல்கலைக்கழக மத்திய நிலைய பணிப்பாளர் டாக்டர் அருளானந்தம் அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பி. பிரதீபன் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.


மூத்தோரின் நினைவுகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் உருவான பாரம்பரிய, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் வேடுவ சமூகம், இஸ்லாமிய சமூகம், இந்து சமூகம், பறங்கி சமூகம் மற்றும் சிங்கள சமூகம் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் பண்டைய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.பெருமளவான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.

Related Post

தளவாய் பகுதியில் கழிவுகள் கொட்டும் மர்ம நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – நிலாந்தன் அறிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
ஏறாவூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் கழிவு மூட்டைகள், தளவாய் பகுதியில் உள்ள ஆலயங்கள், பிரதான வீதிகள் மற்றும் மக்கள் வாழும் இடங்களில் வீசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

இந்திய நிதியுதவியுடன் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்: ஆளுநர் நன்றி தெரிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.…

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

Posted by - February 16, 2026 0
இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு…

ஹெரோயின், மின்னணு தராசுடன் போதைப்பொருள் வியாபாரி கைது.!

Posted by - February 21, 2026 0
களுத்துறை மாவட்டத்தில், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக…

தாமதித்தால் பாதிப்பு உங்களுக்கே – சஜித் அணிக்கு ஐ.தே.க. எச்சரிக்கை.!

Posted by - February 19, 2026 0
எதிர்வரும் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்த பலமான கூட்டணியாகவே எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *