சர்வதேச தாய்மொழி தினம்: மட்டக்களப்பில் அனைத்தின மக்களின் உணவு கண்காட்சி.!

183 0

மட்டக்களப்புவில் இன்று (21) சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சி நடைபெற்றது.
“உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல்” என்ற தொனிப்பொருளில், இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகம் அரசடி பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.


கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மட்டக்களப்பில் வாழும் அனைத்து இன மக்களின் பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.இந்நிகழ்வு பேராசிரியர் சி. ஜெய்சங்கர் அவர்களின் ஒழுங்கமைப்பிலும், கிழக்கு பல்கலைக்கழக மத்திய நிலைய பணிப்பாளர் டாக்டர் அருளானந்தம் அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பி. பிரதீபன் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.


மூத்தோரின் நினைவுகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் உருவான பாரம்பரிய, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் வேடுவ சமூகம், இஸ்லாமிய சமூகம், இந்து சமூகம், பறங்கி சமூகம் மற்றும் சிங்கள சமூகம் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் பண்டைய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.பெருமளவான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.

Related Post

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் வழக்கில் நீதி கோரி வடமராட்சியில் ஆர்ப்பாட்டம்.!

Posted by - February 21, 2026 0
பருத்தித்துறை பகுதியில் இன்று (21.02.2026) நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் காண்பவர்கள் அனைவரையும் கலங்கடித்தது.2007.02.15 அன்று யாழ்ப்பாணம் கலிகைச் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன்…

மார்ச் 12 முதல் அதிகளவு சமையல் எரிவாயு சந்தைக்கு!

Posted by - February 20, 2026 0
எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கடந்த…

விசாரணைக்கு வருவதற்கு ரணிலின் மனைவி மறுப்பு; உடல்நிலையைக் காரணம் காட்டி சி.ஐ.டிக்கு கடிதம்.!

Posted by - February 20, 2026 0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராக முடியாது என அறிவித்துள்ளார்.…

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்வர்கள் மீது வழக்கு தொடரப்படும் – பொலிஸார் எச்சரிக்கை.!

Posted by - February 19, 2026 0
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவிப் பொலிஸ்…

மூலோபாய முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகை!

Posted by - February 16, 2026 0
சுற்றுலா, உற்பத்தி மற்றும் வேளாண் துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நிதி, பொருளாதார…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *