போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு திறந்து வைப்பு.!

409 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரிகுளம் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக, போரதீவுப்பற்று பிரதேசம் பகுதியில் உள்ள வேத்துச்சேனை பிரதான வீதி மீண்டும் சேதமடைந்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து வான் கதவுகள் திறக்கப்பட்டன.

இதனால் வெளியேறிய வெள்ளநீர் காரணமாக வீதி தாழிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 06.02.2026 அன்று ஏற்பட்ட மழையிலும் இவ்வீதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டு உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் மேற்பார்வையில் தற்காலிக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வீதி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. எனினும், இன்று காலை மீண்டும் 6 அடி அளவில் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் அதிக நீர்வரத்து ஏற்பட்டது; இதனால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பகுதி மீண்டும்அடித்துச் செல்லப்பட்டது.


வேத்துச்சேனை கிராமத்திற்கு இது ஒரே போக்குவரத்துப் பாதையாக இருப்பதால் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு, வெல்லாவெளி பிரதேச சபை கனரக வாகனங்களின் உதவியுடன் அவசர சீரமைப்பு பணிகளை முன்னெடுத்தது.

இப்பணிகளில் தவிசாளர் வி. மதிமேனன், வட்டார உறுப்பினர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் இணைந்து வீதியை மீண்டும் போக்குவரத்துக்கு ஏற்றவாறு சீரமைத்துள்ளனர்.ஒவ்வொரு முறையும் வான் கதவுகள் திறக்கப்படும்போது வீதி சேதமடைவது தொடர்கதையாக இருப்பதால், நிரந்தரத் தீர்வாக பாலம் அல்லது வலுவான கட்டுமானம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post

தேரர்களை அவமதிக்கும் அநுர அரசாங்கம்! கொழும்பில் ஒன்றுகூடிய தேரர்கள்

Posted by - February 20, 2026 0
பௌத்தலோக மாவத்தையில் நேற்றையதினம்(20.2.2026) முந்நூறுக்கும் மேற்பட்ட தேரர்களுடன் மாநாடு இடம்பெற்றது. இதன்போது, பௌத்த மதத்திற்கும், பௌத்த தேரரிற்கும் இலங்கையின் தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்ற…

கல்லுண்டாய் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை.!

Posted by - February 20, 2026 0
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண ஆளுநர்…

இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை.!

Posted by - February 20, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின்…

இலங்கையில் பூனைகளிடமிருந்து பரவும் ரேபிஸ் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Posted by - February 19, 2026 0
இலங்கையில் பூனைகளிடமிருந்து ரேபிஸ் பரவுதல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர் ஆலோசகர், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் அதுல லியனபதிரன ரேபிஸ்…

நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்.!

Posted by - February 19, 2026 0
நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து பொதுமக்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *