போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு திறந்து வைப்பு.!

222 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரிகுளம் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக, போரதீவுப்பற்று பிரதேசம் பகுதியில் உள்ள வேத்துச்சேனை பிரதான வீதி மீண்டும் சேதமடைந்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து வான் கதவுகள் திறக்கப்பட்டன.

இதனால் வெளியேறிய வெள்ளநீர் காரணமாக வீதி தாழிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 06.02.2026 அன்று ஏற்பட்ட மழையிலும் இவ்வீதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டு உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் மேற்பார்வையில் தற்காலிக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வீதி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. எனினும், இன்று காலை மீண்டும் 6 அடி அளவில் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் அதிக நீர்வரத்து ஏற்பட்டது; இதனால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பகுதி மீண்டும்அடித்துச் செல்லப்பட்டது.


வேத்துச்சேனை கிராமத்திற்கு இது ஒரே போக்குவரத்துப் பாதையாக இருப்பதால் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு, வெல்லாவெளி பிரதேச சபை கனரக வாகனங்களின் உதவியுடன் அவசர சீரமைப்பு பணிகளை முன்னெடுத்தது.

இப்பணிகளில் தவிசாளர் வி. மதிமேனன், வட்டார உறுப்பினர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் இணைந்து வீதியை மீண்டும் போக்குவரத்துக்கு ஏற்றவாறு சீரமைத்துள்ளனர்.ஒவ்வொரு முறையும் வான் கதவுகள் திறக்கப்படும்போது வீதி சேதமடைவது தொடர்கதையாக இருப்பதால், நிரந்தரத் தீர்வாக பாலம் அல்லது வலுவான கட்டுமானம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post

யட்டியாந்தோட்டையில் சுற்றுலா பேருந்து விபத்து

Posted by - February 20, 2026 0
யட்டியாந்தோட்டைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட தணகொலவத்த பகுதியில், தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (20) மாலை 4.00 மணியளவில்…

யாழ். பல்கலையில் 40 ஆவது பட்டமளிப்பு விழா: இன்று மூன்றாம் நாள் அமர்வுகள்.!

Posted by - February 21, 2026 0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்த்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்று (சனிக்கிழமை) வெகுவிமரிசையாக நடைபெற்றன.கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இவ்விழா, நாளை ஞாயிற்றுக்கிழமை…

இந்தியப் பிரதமரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி.!

Posted by - February 20, 2026 0
புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (20) நண்பகல் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் சந்தித்தார். AI Impact 2026 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக…

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் பத்து பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.!

Posted by - February 19, 2026 0
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 10 தமிழக மீனவர்களை எதிர்வரும் மார்ச் 05, 2026 வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று…

முச்சக்கரவண்டி – நோயாளர் காவு வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து.!

Posted by - February 21, 2026 0
அக்குரஸ்ஸ மாத்தறை பிரதான சாலையில் பரதுவ கோட்டா போதி அருகே பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நோயாளர் காவு வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்து இன்று (21)…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *