மருத்துவத்துறையில் எட்டு தங்கப்பதக்கங்களை பெற்ற மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் .!

252 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட மாணவர்கள் ஐவருக்குத் தங்கப் பதக்கங்கள், சிறப்புப் பரிசில் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர் அந்தவகையில் நற்குணம் அபிராமி, அச்சுதன் கபிலன் , சுப்பையா துர்க்கா ,பாத்திமா அகிலா மற்றும் முகமட் பாத்திமா சபீயா ஆகியோர் தங்க பதக்கங்களை பெற்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (19) வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.பட்டமளிப்பு விழா நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது, 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கெளரவிக்கப்படவும் உள்ளனர்.

Related Post

இந்திய விஜயம் மட்டும் போதாது: மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – ரஞ்சித் மத்தும பண்டார.!

Posted by - February 21, 2026 0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மட்டும் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அரசு…

தங்க விலையில் மாற்றமில்லை: நகையக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.!

Posted by - February 20, 2026 0
உள்நாட்டுச் சந்தையில் இன்று தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24…

கவிதை நூல் வெளியீட்டு விழா.!

Posted by - February 20, 2026 0
மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் முன்னாள் மாணவி செல்வி ஜே.ஜஸ்வரியாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 20.02.2026.காலை 10…

முச்சக்கரவண்டி – நோயாளர் காவு வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து.!

Posted by - February 21, 2026 0
அக்குரஸ்ஸ மாத்தறை பிரதான சாலையில் பரதுவ கோட்டா போதி அருகே பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நோயாளர் காவு வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்து இன்று (21)…

பிரதமரின் தலைமையில் மாத்தறை கலை விழா கோலாகலமாக ஆரம்பம்.!

Posted by - February 20, 2026 0
மாத்தறை – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் பல்வேறு கலைப்படைப்புகளை ஒருங்கிணைத்து நடக்கும் ‘மாத்தறை கலை விழா’ (Matara Festival for the Arts) பிரதமர் கலாநிதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *