அக்குரஸ்ஸ மாத்தறை பிரதான சாலையில் பரதுவ கோட்டா போதி அருகே பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நோயாளர் காவு வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்து இன்று (21) பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் எவரும் உயிரிழந்தார்களா அல்லது காயமடைந்தார்களா என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.சம்பவ இடத்தில் பொலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.
