பாகிஸ்தானின் கராச்சியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு.!

125 0

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் நேற்று இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரமழான் நோன்பு தொடங்கிய முதல் நாளையொட்டி, அதிகாலை நேரத்தில் மக்கள் உணவு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். நோன்பு ஆரம்பிக்கும் முன் ஸஹர் உணவுக்காக பல வீடுகளில் சமையல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது.

வெடிப்பின் தாக்கம் காரணமாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் முழுமையாக இடிந்து சரிந்துள்ளது. இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கினர்.இந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.அதேவேளை, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புக் குழுக்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவுகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரமழான் நோன்பு தொடங்கிய முதல் நாளிலேயே ஏற்பட்ட இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்!

Posted by - February 20, 2026 0
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான Paris நகரில் இடம்பெற்ற சாலை விபத்தில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பரிசின் வடக்குப் பகுதியான 10ஆம் வட்டாரத்தில், பார்பேஸ்–ரோஷ்சுவார் நிலையம்…

குடியேற்ற விதிகளை மீண்டும் மாற்றியமைக்கும் கனடா!

Posted by - February 19, 2026 0
ஆராய்ச்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் விமானப் போக்குவரத்து வரையிலான துறைகளில் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கும், சில இராணுவ ஆட்சேர்ப்புகளைச் சேர்ப்பதற்கும் கனடா புதன்கிழமை (19) புதிய…

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

Posted by - February 20, 2026 0
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக 33 பேர் கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் படை பணியமர்த்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து…

கிரீன்லாந்து விவகாரம் தீவிரம்: அமெரிக்க கருத்துக்கிடையில் டென்மார்க் மன்னர் பயணம்.!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அந்தத் தீவு மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் டென்மார்க் மன்னர்…

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

Posted by - February 16, 2026 0
பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளில் நிலவும் கடும் உறைபனி காரணமாக மெட் ஆபீஸ் (Met Office) புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *