பாகிஸ்தானின் கராச்சியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு.!

372 0

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் நேற்று இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரமழான் நோன்பு தொடங்கிய முதல் நாளையொட்டி, அதிகாலை நேரத்தில் மக்கள் உணவு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். நோன்பு ஆரம்பிக்கும் முன் ஸஹர் உணவுக்காக பல வீடுகளில் சமையல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது.

வெடிப்பின் தாக்கம் காரணமாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் முழுமையாக இடிந்து சரிந்துள்ளது. இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கினர்.இந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.அதேவேளை, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புக் குழுக்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவுகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரமழான் நோன்பு தொடங்கிய முதல் நாளிலேயே ஏற்பட்ட இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய தகவல்களை வெளியிட டிரம்ப் உத்தரவு.!

Posted by - February 20, 2026 0
வேற்றுகிரகவாசிகள் தொடர்பான அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின் நெவாடா பகுதியில் ”ஏரியா-51”ல் வேற்றுகிரகவாசியை வைத்து ரகசியமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள்…

கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த…

நைஜீரிய படையினருக்கு பயிற்சி அளிக்க படையினரை அனுப்ப திட்டம் – அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் நடவடிக்கை.!

Posted by - February 19, 2026 0
தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் நைஜீரியப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவென பென்டகன் இருநூறு படையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். அமெரிக்கா அனுப்பி வைக்கும் படையினர்…

நியூயார்க் நகரத்தைத் தாக்கிய பனிப்புயல்.!

Posted by - February 23, 2026 0
அமெரிக்கா- நியூயார்க் நகரத்தைத் தாக்கிய கடுமையான பனிப்புயல் காரணமாக, நேற்று இரவு முதல் நகரம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி நகரத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகள்…

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 11 பேர் உயிரிழப்பு!

Posted by - February 16, 2026 0
காசாவில் ஞாயிற்றுக்கிழமை (15) காலை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பதினொரு பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு காசாவில் ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *