தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

294 0

இராணுவச் சட்டத்தை திணிக்க முயற்சித்தன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து தென் கொரிய நீதிமன்றம் இன்று (19) அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை உத்தரவு பிறப்பித்தது.

2024 டிசம்பரில் யூன் சுக் இயோல் இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது தேசிய சட்டமன்றத்தை முடக்கும் நோக்கம் கொண்டது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

வழக்கு விசாரணையில் மரண தண்டனை விதிக்குமாறு சட்டத்தரணிகள் மனுவில் கோரியிருந்த போதிலும், நீதிமன்றம் 65 வயதான முன்னாள் ஜனாதிபதிக்கு சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.எனினும், யூன் சுக் இயோல் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இராணுவச் சட்டத்தை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைத் தடுப்பது குறித்து எச்சரிக்கை விடுப்பதை நோக்கமாகக் கொண்டதாக அவரது நடவடிக்கை இருப்பதாகவும் வாதிட்டார்.

தென் கொரிய சட்டத்தின் கீழ் ஒரு கிளர்ச்சியை திட்டமிட்டு நடத்துவதுவதற்கு அதிகபட்சமாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.தென் கொரியா இறுதியாக 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனையை வழங்கியது, ஆனால் 1997 முதல் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post

குடியேற்ற விதிகளை மீண்டும் மாற்றியமைக்கும் கனடா!

Posted by - February 19, 2026 0
ஆராய்ச்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் விமானப் போக்குவரத்து வரையிலான துறைகளில் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கும், சில இராணுவ ஆட்சேர்ப்புகளைச் சேர்ப்பதற்கும் கனடா புதன்கிழமை (19) புதிய…

தாலிபான் புதிய சட்டம்: பெண்கள் கடும் அதிர்ச்சி.!

Posted by - February 20, 2026 0
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கும் நிலையில், அவர்கள் கொண்டு வந்த புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டத்தின்படி கணவர்கள் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும்…

அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்.!

Posted by - February 19, 2026 0
இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) கீழ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவனம், மார்சேய் ஃபோஸ் துறைமுகம் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. பிரெஞ்சு…

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

Posted by - February 16, 2026 0
பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளில் நிலவும் கடும் உறைபனி காரணமாக மெட் ஆபீஸ் (Met Office) புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு…

கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *