ஈரான் விவகாரம் தீவிரம்: பிரித்தானியத் தளங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.!

262 0

ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரசின் சாகோஸ் தீவுகள் தொடர்பான ஒப்பந்தத்தை முடக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.


சர்வதேசச் சட்டம் மீறப்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, டியாகோ கார்சியா தீவு அல்லது குளோசெஸ்டர்ஷையர் மாகாணத்தில் அமைந்துள்ள அரச வான்படைத் தளத்திலிருந்து எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்க ஜனாதிபதியை எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டார்மரின் இந்த முடிவு, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சாகோஸ் தீவுகளை மொரீஷியஸ் நாட்டிடம் ஒப்படைக்கும் திட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.முன்னதாக, ஈரான் கடற்பரப்பிற்கு அருகில் பெரும் போர்க்கப்பலை நிலைநிறுத்திய ட்ரம்ப், அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமைதி ஒப்பந்தத்தை பத்து நாட்களுக்குள் எட்ட வேண்டும் என ஈரான் அரசை எச்சரித்திருந்தார்.

இல்லையெனில் கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதன்கிழமை இரவு சமூக வலைத்தளங்களில் தனது கருத்தை வெளியிட்ட ட்ரம்ப், முக்கியமான இந்தத் தீவின் கட்டுப்பாட்டை இழப்பது பெரிய தவறாகும் என பிரித்தானிய அரசை எச்சரித்துள்ளார்.

மேலும், ஈரான் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால், டியாகோ கார்சியா உள்ளிட்ட தளங்களிலிருந்து தாக்குதல் நடத்த வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், ஈரான் மீது அமெரிக்கா மேற்கொள்ளக்கூடிய இராணுவ நடவடிக்கைகள், பிரித்தானியா உட்பட பல நாடுகளை பாதுகாப்பதற்காகவே என ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

Related Post

நைஜீரியாவில் வெடித்துச் சிதறிய சுரங்கம் – தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
நைஜீரியா,ப்ளாட் டியூ மாகாணம், வேஸ் பகுதியிலுள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில்…

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இளம் வயதில் எழுதிய கடிதம் ஏலத்திற்கு.!

Posted by - February 19, 2026 0
பிரித்தானியாவின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது சிறுவயதில் கையினால் எழுதிய அரிய கடிதம் ஒன்று,எதிர்வரும் 27-ஆம் திகதி ஏலத்திற்கு வரவுள்ளது.சுமார் 4,000 பவுண்டுகள் வரை ஏலம்…

ரஷ்யா – உக்ரைன் மோதல் மீண்டும் தீவிரம்.!

Posted by - February 23, 2026 0
பெப்ரவரி 22, 2026 அன்று, ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய இரவு தாக்குதலை நடத்தியது . இதில் 50 ஏவுகணைகள் மற்றும் 297 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.உக்ரைன் விமானப்படை…

இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த முன்னாள் கேப்டன்கள் !

Posted by - February 19, 2026 0
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

தாலிபான் புதிய சட்டம்: பெண்கள் கடும் அதிர்ச்சி.!

Posted by - February 20, 2026 0
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கும் நிலையில், அவர்கள் கொண்டு வந்த புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டத்தின்படி கணவர்கள் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *