யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்த்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்று (சனிக்கிழமை) வெகுவிமரிசையாக நடைபெற்றன.
கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இவ்விழா, நாளை ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
மொத்தம் 12 அமர்வுகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 3,252 மாணவர்கள் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசால் பேராசிரியர் இ. குமாரவடிவேல் அவர்களின் தலைமையில் அமர்வுகள் நடைபெற்று வருகின்றன.பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி மாணவர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்படுகின்றனர்.
இறுதி நாள் அமர்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


