ஆசன விவகாரம் : அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா? – ஜெசீதன் கேள்வி.!

412 0

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க. ஜெசீதன், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நேற்றைய பிரதேச சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் யார் எங்கு அமர வேண்டும் என்பது குறித்து பேசும் அருச்சுனா, தாமே முன்பு எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா என கேள்வி எழுப்பினார்.


சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தாம் ஆசனத்துக்காக சண்டையிட்டதாக கூறப்படுவது உண்மையல்ல என்றும், தமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தால் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரை நேரடியாக காண முடியாத சூழல் இருந்ததால் இடமாற்றம் கோரியதாகவும் விளக்கினார்.

சுற்றுநிருபத்தின் படி, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர், பிரதேச செயலர் மற்றும் அந்தப் பிரதேசத்தின் தவிசாளர் முன்னிலையில் அமர வேண்டும் என்ற நடைமுறை இருப்பதாகவும், அது தமிழர் பகுதிகளில் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


பிரச்சினை எழுந்தபின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தமக்கான ஆசனத்தை அருகில் வழங்கியதாகவும், அதன்பின்னர் அருச்சுனா தம்மை அங்கிருந்து அகற்றும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டதாகவும் ஜெசீதன் தெரிவித்தார்.

மேலும், டித்வா புயல் பாதிப்புகள், மாதகல் நரியோடை வீதி புனரமைப்பு (2.4 மில்லியன் ரூபா), மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்களில் தாம் கேள்வி எழுப்பியபோது, அருச்சுனா குறுக்கிட்டு ஒருங்கிணைப்பு குழுத் தலைவரை பாதுகாத்ததாகவும் குற்றம்சாட்டினார்.இவ்விடயங்கள் தொடர்பில் இதுவரை அருச்சுனா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.

Related Post

டைனமைட் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது.!

Posted by - February 19, 2026 0
மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் ‘டைனமைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில்…

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

Posted by - February 24, 2026 0
கடந்த 6 வருடங்களாக தாமதிக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் குறித்து…

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
மஹியங்கனை – மெதஓயா பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) மதியம் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.…

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு திறந்து வைப்பு.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரிகுளம் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக, போரதீவுப்பற்று பிரதேசம் பகுதியில் உள்ள வேத்துச்சேனை பிரதான வீதி மீண்டும் சேதமடைந்துள்ளது.தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால்…

வடக்கு மாகாணத்தில் ‘நிழல் அமைச்சர்கள்’ நியமனம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.!

Posted by - February 20, 2026 0
வடக்கு மாகாண சபை இயங்காமல் இருக்கின்ற நிலையில், மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு துறைக்கும் நிழல் அமைச்சர்களை நியமித்து ஆட்சி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *