குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் 27 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று நள்ளிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த 31 வயதுடைய கணவர், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்போது ஆத்திரமடைந்த அவர் கூர்மையான ஆயுதத்தால் மனைவியை வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.பாரிய வெட்டுக் காயங்களுக்கு உள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்திற்குப் பின்னர் சந்தேகநபரான கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
