இளம் குடும்பப் பெண் வெட்டிக் கொ*லை – கணவர் தப்பியோட்டம்.!

384 0

குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் 27 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


நேற்று நள்ளிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த 31 வயதுடைய கணவர், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்போது ஆத்திரமடைந்த அவர் கூர்மையான ஆயுதத்தால் மனைவியை வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.பாரிய வெட்டுக் காயங்களுக்கு உள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


சம்பவத்திற்குப் பின்னர் சந்தேகநபரான கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமர் முக்கிய சந்திப்பு.!

Posted by - February 20, 2026 0
அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான தீர்க்கமான இருதரப்புப் பேச்சுவார்த்தை இன்று வெள்ளிக்கிழமை…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் பிரணவசோதி உயிரிழப்பு.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த இளம் மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி (31) அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.காரைதீவுவைச் சேர்ந்த இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர்…

இந்தியா – இலங்கை உறவில் புதிய இராஜதந்திர அத்தியாயம்: மோடி – அநுர விசேட சந்திப்பு.!

Posted by - February 19, 2026 0
அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு புதுடில்லியில் நடைபெற்றது.…

கல்லுண்டாய் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை.!

Posted by - February 20, 2026 0
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண ஆளுநர்…

எவரையும் கைவிடாத செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் – புதுடில்லியில் அநுர அதிரடிப் பிரகடனம்

Posted by - February 19, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லியில் நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நெறிமுறைகள் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *