டைனமைட் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது.!

289 0

மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் ‘டைனமைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழன் (19) உத்தரவிட்டுள்ளது.

மன்னார் – தாழ்வுபாடு பகுதியில் இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் டைனமைட் வெடிபொருட்களை வைத்திருந்த இரு மீனவர்களை ஓலைத்தொடுவாய் கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் மூன்று தொகுதி டைனமைட் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர்களையும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று வியாழக்கிழமை மதியம் குறித்த இரு சந்தேக நபர்களையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் இரு மீனவர்களையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரம் கைப்பற்றப்பட்ட ‘டைனமைட்’ வெடிபொருட்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Post

வடக்கு இளைஞர்களுக்கு வான்வழித் துறை வாய்ப்பு:பலாலியில் உயர்மட்டக் குழு முக்கிய கள விஜயம்!

Posted by - February 19, 2026 0
வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறையைப் பற்றிய கல்வியை ஊக்குவிப்பது நோக்கமாக, விசேட உயர்மட்டக் கலந்துரையாடலும், அதன்பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி…

விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது.!

Posted by - February 19, 2026 0
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (18) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 549 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…

வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை.!

Posted by - February 20, 2026 0
வடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே சீரற்ற ஆசிரிய…

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதிகாரி நியமனம்!

Posted by - February 20, 2026 0
யாழ்ப்பாணம்-சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரி சி.நிதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு இன்று(20.2.2026) திடீர் இடமாற்றம் வழங்கப்பட்ட…

இங்கிலாந்து துணைப் பிரதமர் நாளை இலங்கை வருகை

Posted by - February 16, 2026 0
ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, நாளை (17)  இலங்கைக்கு ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். தனது விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *