தளவாய் பகுதியில் கழிவுகள் கொட்டும் மர்ம நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – நிலாந்தன் அறிவிப்பு.!

171 0

ஏறாவூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் கழிவு மூட்டைகள், தளவாய் பகுதியில் உள்ள ஆலயங்கள், பிரதான வீதிகள் மற்றும் மக்கள் வாழும் இடங்களில் வீசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு செயற்படும் மர்ம நபர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் முன்வைத்த புகார்களைத் தொடர்ந்து சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

சிலர் கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கழிவுகள் மற்றும் மலக் கழிவுகளை மூட்டைகளில் கட்டி தளவாய் பகுதிகளில் வீசிவிட்டு செல்வதாக கூறினார். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், இந்து ஆலயங்களின் புனிதத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறான செயற்பாடுகளை ஏற்க முடியாதது என்றும், அபராதம் விதிப்பதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளர் ஊடாக ஏறாவூர் நகர சபைக்கு தகவல் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.மேலும், அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும். கோழிப் பண்ணை தொடர்பிலும், வீதி விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் கழிவுகள் வீசப்படுவதாகவும், கழிவு அகற்றும் வாகனங்கள் முறையாக வராததால் கழிவுகள் தேங்கி கிடப்பதாகவும் தளவாய் மீனவர் சங்கமும் ஆலய நிர்வாகத்தினரும் கவனம் ஈர்த்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்களைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், குற்றவாளிகளை அடையாளம் காண பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சபைமூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Post

யாழ். பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா; முகாமைத்துவ பீடத்தில் 7 தங்கப் பதக்கங்களைச் சூடிய மாணவி.!

Posted by - February 20, 2026 0
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகிய இந்தப் பட்டமளிப்பு வைபவம் நாளைமறுதினம்…

பிரதமரின் தலைமையில் மாத்தறை கலை விழா கோலாகலமாக ஆரம்பம்.!

Posted by - February 20, 2026 0
மாத்தறை – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் பல்வேறு கலைப்படைப்புகளை ஒருங்கிணைத்து நடக்கும் ‘மாத்தறை கலை விழா’ (Matara Festival for the Arts) பிரதமர் கலாநிதி…

ஹெரோயின், மின்னணு தராசுடன் போதைப்பொருள் வியாபாரி கைது.!

Posted by - February 21, 2026 0
களுத்துறை மாவட்டத்தில், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக…

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதிகாரி நியமனம்!

Posted by - February 20, 2026 0
யாழ்ப்பாணம்-சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரி சி.நிதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு இன்று(20.2.2026) திடீர் இடமாற்றம் வழங்கப்பட்ட…

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

Posted by - February 16, 2026 0
இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *