தளவாய் பகுதியில் கழிவுகள் கொட்டும் மர்ம நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – நிலாந்தன் அறிவிப்பு.!

385 0

ஏறாவூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் கழிவு மூட்டைகள், தளவாய் பகுதியில் உள்ள ஆலயங்கள், பிரதான வீதிகள் மற்றும் மக்கள் வாழும் இடங்களில் வீசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு செயற்படும் மர்ம நபர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் முன்வைத்த புகார்களைத் தொடர்ந்து சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

சிலர் கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கழிவுகள் மற்றும் மலக் கழிவுகளை மூட்டைகளில் கட்டி தளவாய் பகுதிகளில் வீசிவிட்டு செல்வதாக கூறினார். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், இந்து ஆலயங்களின் புனிதத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறான செயற்பாடுகளை ஏற்க முடியாதது என்றும், அபராதம் விதிப்பதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளர் ஊடாக ஏறாவூர் நகர சபைக்கு தகவல் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.மேலும், அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும். கோழிப் பண்ணை தொடர்பிலும், வீதி விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் கழிவுகள் வீசப்படுவதாகவும், கழிவு அகற்றும் வாகனங்கள் முறையாக வராததால் கழிவுகள் தேங்கி கிடப்பதாகவும் தளவாய் மீனவர் சங்கமும் ஆலய நிர்வாகத்தினரும் கவனம் ஈர்த்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்களைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், குற்றவாளிகளை அடையாளம் காண பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சபைமூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Post

கவிதை நூல் வெளியீட்டு விழா.!

Posted by - February 20, 2026 0
மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் முன்னாள் மாணவி செல்வி ஜே.ஜஸ்வரியாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 20.02.2026.காலை 10…

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு திறந்து வைப்பு.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரிகுளம் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக, போரதீவுப்பற்று பிரதேசம் பகுதியில் உள்ள வேத்துச்சேனை பிரதான வீதி மீண்டும் சேதமடைந்துள்ளது.தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால்…

மார்ச் 12 முதல் அதிகளவு சமையல் எரிவாயு சந்தைக்கு!

Posted by - February 20, 2026 0
எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கடந்த…

தேரர்களை அவமதிக்கும் அநுர அரசாங்கம்! கொழும்பில் ஒன்றுகூடிய தேரர்கள்

Posted by - February 20, 2026 0
பௌத்தலோக மாவத்தையில் நேற்றையதினம்(20.2.2026) முந்நூறுக்கும் மேற்பட்ட தேரர்களுடன் மாநாடு இடம்பெற்றது. இதன்போது, பௌத்த மதத்திற்கும், பௌத்த தேரரிற்கும் இலங்கையின் தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்ற…

இந்திய நிதியுதவியுடன் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்: ஆளுநர் நன்றி தெரிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *