காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் சத்தியலிங்கம் எம்.பி தெரிவிப்பு.!

264 0

காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய நாட்டிலே வடக்கு மாகாணம் என்பது வெங்காயம், உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையிலே ஒரு பாரிய பங்களிப்பை கடந்த காலங்களிலே செய்த ஒரு மாகாணம்.ஆனால் அந்த மாகாணத்திலே இப்போது இந்தப் பயிர்ச்செய்கை பல விதத்திலும் பாதிக்கப்பட்டு ஒரு நலிவுற்ற பயிர்ச்செய்கையாக இருக்கிறது.

இவ்வாறு இறக்குமதிகளுக்கு வரியை விதிப்பதன் ஊடாக இறக்குமதியை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் அரசாங்கத்துக்கான வரி விதிப்பின் ஊடாக பெறப்படுகின்ற வருமானம் ஏற்படுவதோடு, உள்நாட்டு உற்பத்தியை பெருக்குகின்ற ஒரு உத்தியாக இதை நாங்கள் பார்க்கலாம்.

ஆனால் நாங்கள் இவ்வாறான உணவுப் பொருட்களுக்கு எங்களுடைய நாட்டிலே தன்னிறைவை ஏற்படுத்தக்கூடிய வகையிலே வரி விதிப்பு மாத்திரம் அதற்கு உறுதுணையாக இருக்காது.ஒரு பொருளுக்குரிய வரி விதிக்கப்படும்போது அதில் இரண்டு பக்கங்களையும் நாங்கள் பார்க்க வேண்டும்.

ஒன்று, இந்த வரி விதிப்பால் உள்நாட்டு உற்பத்தியை கூட்டுகின்ற போது விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இலாபம்.அதேபோல வரி விதிப்பின் ஊடாக நுகர்வோருக்கு ஒரு பாரிய சுமையை, செலவை ஏற்படுத்துகின்ற அடுத்த பக்கத்தையும் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

எங்களுடைய நாட்டைப் பொறுத்தவரையிலே உற்பத்தியாளர்களைப் பார்த்தீர்களானால் அவர்களுடைய உற்பத்தியைப் பெருக்குவதற்கு பல விடயங்களை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

உதாரணமாக, இந்த உற்பத்தியாளர்கள்; இந்த நாடு தன்னிறைவு அடைய வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கான பல உதவிகளை இந்த அரசாங்கம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.அந்த வகையிலே இந்த உற்பத்தியாளர், விவசாயிகளுக்கான மானியம் மிகவும் முக்கியமான ஒரு விடயம்.

கடந்த பெரும் போகத்தில் கூட நெல்லுக்கான உர மானியத்தைப் பெற வேண்டிய எமது விவசாயிகள், வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் தற்போது 85 வீதமான அறுவடை முடிந்துவிட்டது.எனினும் இன்றுவரை அவர்களுக்கான உர மானியம் கிடைக்கவில்லை.

இவ்வாறிருக்குமாக இருந்தால் எவ்வாறு நாங்கள் இந்த நாட்டினுடைய உற்பத்தி பொருளாதாரத்தை பெருக்குவது என பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Post

மீண்டும் ஒரு இருண்ட காலம் உருவாக இடமளிக்காதீர்கள் – மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு கோடீஸ்வரன் எம்.பி. கடும் எதிர்ப்பு.!

Posted by - February 21, 2026 0
இலங்கையில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை மீண்டும் ஒருபோதும் உருவாகக் கூடாது எனவும், அதனைத் தடுக்கும் வகையில் அரசு…

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் பத்து பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.!

Posted by - February 19, 2026 0
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 10 தமிழக மீனவர்களை எதிர்வரும் மார்ச் 05, 2026 வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று…

இளம் குடும்பப் பெண் வெட்டிக் கொ*லை – கணவர் தப்பியோட்டம்.!

Posted by - February 21, 2026 0
குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் 27 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், குடும்பத் தகராறு காரணமாக…

யாழ். பல்கலையில் 40 ஆவது பட்டமளிப்பு விழா: இன்று மூன்றாம் நாள் அமர்வுகள்.!

Posted by - February 21, 2026 0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்த்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்று (சனிக்கிழமை) வெகுவிமரிசையாக நடைபெற்றன.கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இவ்விழா, நாளை ஞாயிற்றுக்கிழமை…

சிறப்பாக நடைபெற்ற உணவுத் திருவிழா.!

Posted by - February 19, 2026 0
IMHO இன் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (18) PMD கலாச்சார மண்டபத்தில் “உணவுத் திருவிழா” மிகவும் சிறப்பாக நடைபெற்றது. “உணவே மருந்து”என்பதற்கிணங்க உடலுக்கு தேவையான போசணையான உணவுகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *