ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

186 0

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டு மத்திய அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் (Chaudhry Salik Hussain) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்துவதை ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியதுடன், கடந்த காலங்களில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி உள்ளிட்ட இலங்கை மக்கள் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதெல்லாம் பாகிஸ்தான் வழங்கிய இதயபூர்வமான ஆதரவிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் போட்டியில் பங்கேற்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவிய நேரத்தில் இலங்கை அரசாங்கம் தலையிட்டதற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பாக இலங்கை அரசாங்கத்திற்கு விசேட நன்றிகளைத் தெரிவித்த தூதுக்குழுவினர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உள்ளிட்ட அனைவருக்கும் இலங்கையில் வழங்கப்பட்ட விருந்தோம்பலையும் இலங்கை மக்களின் நட்புறவான வரவேற்பையும் பாராட்டியிருந்தனர்.

Related Post

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; இளைஞன் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
அனுராதபுரம், ஹரிகஸ்வெவ – கலங்குட்டிய கால்வாய் அருகே இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 26…

மன்னாரில் தொடரும் நகை அபகரிப்பு – பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

Posted by - February 21, 2026 0
மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று (21) காலை கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பின்னர் அவர்கள் மன்னார் மாவட்டச் செயலகம்…

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Posted by - February 21, 2026 0
புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மற்றும் இலங்கை…

இலங்கை லொத்தர் வரலாற்றில் சாதனை; 62 கோடி ரூபாய் பரிசுத் தொகை வென்ற நபர்.!

Posted by - February 20, 2026 0
இலங்கை லொத்தர் வரலாற்றில் மிகப் பெரிய பரிசுத் தொகை நேற்று (19) வெல்லப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில் 62 கோடி ரூபாய்…

மாகாண சபை தேர்தல் குறித்து ஆராய விசேட குழு நியமனம்

Posted by - February 20, 2026 0
நீண்ட காலமாக இழுபறியிலுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குரிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *