ஆசன விவகாரம் : அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா? – ஜெசீதன் கேள்வி.!

245 0

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க. ஜெசீதன், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நேற்றைய பிரதேச சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் யார் எங்கு அமர வேண்டும் என்பது குறித்து பேசும் அருச்சுனா, தாமே முன்பு எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா என கேள்வி எழுப்பினார்.


சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தாம் ஆசனத்துக்காக சண்டையிட்டதாக கூறப்படுவது உண்மையல்ல என்றும், தமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தால் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரை நேரடியாக காண முடியாத சூழல் இருந்ததால் இடமாற்றம் கோரியதாகவும் விளக்கினார்.

சுற்றுநிருபத்தின் படி, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர், பிரதேச செயலர் மற்றும் அந்தப் பிரதேசத்தின் தவிசாளர் முன்னிலையில் அமர வேண்டும் என்ற நடைமுறை இருப்பதாகவும், அது தமிழர் பகுதிகளில் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


பிரச்சினை எழுந்தபின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தமக்கான ஆசனத்தை அருகில் வழங்கியதாகவும், அதன்பின்னர் அருச்சுனா தம்மை அங்கிருந்து அகற்றும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டதாகவும் ஜெசீதன் தெரிவித்தார்.

மேலும், டித்வா புயல் பாதிப்புகள், மாதகல் நரியோடை வீதி புனரமைப்பு (2.4 மில்லியன் ரூபா), மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்களில் தாம் கேள்வி எழுப்பியபோது, அருச்சுனா குறுக்கிட்டு ஒருங்கிணைப்பு குழுத் தலைவரை பாதுகாத்ததாகவும் குற்றம்சாட்டினார்.இவ்விடயங்கள் தொடர்பில் இதுவரை அருச்சுனா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.

Related Post

தளவாய் பகுதியில் கழிவுகள் கொட்டும் மர்ம நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – நிலாந்தன் அறிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
ஏறாவூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் கழிவு மூட்டைகள், தளவாய் பகுதியில் உள்ள ஆலயங்கள், பிரதான வீதிகள் மற்றும் மக்கள் வாழும் இடங்களில் வீசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

புதுடில்லியில் அநுர – இம்மானுவேல் சந்திப்பு!

Posted by - February 19, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று பிற்பகலில் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ சர்வதேச உச்சிமாநாட்டின் பின்னணி சந்திப்பில்…

மன்னாரில் தொடரும் நகை அபகரிப்பு – பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

Posted by - February 21, 2026 0
மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று (21) காலை கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பின்னர் அவர்கள் மன்னார் மாவட்டச் செயலகம்…

மாகாண சபைத் தேர்தலை காலதாமதமின்றி நடத்துங்கள் – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
ஐக்கிய தேசியக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ, மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து ஆராய விசேட நாடாளுமன்றத்…

தேரர்களை அவமதிக்கும் அநுர அரசாங்கம்! கொழும்பில் ஒன்றுகூடிய தேரர்கள்

Posted by - February 20, 2026 0
பௌத்தலோக மாவத்தையில் நேற்றையதினம்(20.2.2026) முந்நூறுக்கும் மேற்பட்ட தேரர்களுடன் மாநாடு இடம்பெற்றது. இதன்போது, பௌத்த மதத்திற்கும், பௌத்த தேரரிற்கும் இலங்கையின் தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *