ஆசன விவகாரம் : அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா? – ஜெசீதன் கேள்வி.!

177 0

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க. ஜெசீதன், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நேற்றைய பிரதேச சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் யார் எங்கு அமர வேண்டும் என்பது குறித்து பேசும் அருச்சுனா, தாமே முன்பு எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா என கேள்வி எழுப்பினார்.


சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தாம் ஆசனத்துக்காக சண்டையிட்டதாக கூறப்படுவது உண்மையல்ல என்றும், தமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தால் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரை நேரடியாக காண முடியாத சூழல் இருந்ததால் இடமாற்றம் கோரியதாகவும் விளக்கினார்.

சுற்றுநிருபத்தின் படி, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர், பிரதேச செயலர் மற்றும் அந்தப் பிரதேசத்தின் தவிசாளர் முன்னிலையில் அமர வேண்டும் என்ற நடைமுறை இருப்பதாகவும், அது தமிழர் பகுதிகளில் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


பிரச்சினை எழுந்தபின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தமக்கான ஆசனத்தை அருகில் வழங்கியதாகவும், அதன்பின்னர் அருச்சுனா தம்மை அங்கிருந்து அகற்றும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டதாகவும் ஜெசீதன் தெரிவித்தார்.

மேலும், டித்வா புயல் பாதிப்புகள், மாதகல் நரியோடை வீதி புனரமைப்பு (2.4 மில்லியன் ரூபா), மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்களில் தாம் கேள்வி எழுப்பியபோது, அருச்சுனா குறுக்கிட்டு ஒருங்கிணைப்பு குழுத் தலைவரை பாதுகாத்ததாகவும் குற்றம்சாட்டினார்.இவ்விடயங்கள் தொடர்பில் இதுவரை அருச்சுனா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.

Related Post

கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

டைனமைட் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது.!

Posted by - February 19, 2026 0
மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் ‘டைனமைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில்…

இந்திய நிதியுதவியுடன் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்: ஆளுநர் நன்றி தெரிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.…

சிறப்பாக நடைபெற்ற உணவுத் திருவிழா.!

Posted by - February 19, 2026 0
IMHO இன் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (18) PMD கலாச்சார மண்டபத்தில் “உணவுத் திருவிழா” மிகவும் சிறப்பாக நடைபெற்றது. “உணவே மருந்து”என்பதற்கிணங்க உடலுக்கு தேவையான போசணையான உணவுகளை…

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி: காரணமான இருந்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – வேந்தன் கண்டனம்.!

Posted by - February 21, 2026 0
மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லையைத் தாங்க முடியாமல், முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்வலைகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *