பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக அந்தோனியா ரோமியோ நியமிக்கப்படுவதில் சர்ச்சை.!

303 0

பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் டேம் அந்தோனியா ரோமியோ, நியூயோர்க்கில் சிரேஷ்ட இராஜதந்திரியாக பணியாற்றிய காலத்தில் ஊழியர்களைத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பத்தாண்டுகளுக்கு முன்பு நியூயோர்க்கிற்கான பிரித்தானிய தூதராக இருந்தபோது, ஊழியர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதாகவும், பணியிடத்தில் பயம் மற்றும் கவலை நிலவிய சூழலை உருவாக்கியதாகவும் ஆவணங்கள் வெளிவந்துள்ளன.

மேலும், அரசாங்க நலன்களை விட தனிப்பட்ட சுய விளம்பரத்திற்கும் சமூக வலைத்தளச் செயல்பாடுகளுக்கும் முன்னுரிமை வழங்கியதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இருப்பினும், இவ்விவகாரத்தில் ஒரே ஒரு அதிகாரப்பூர்வ முறைப்பாடு மட்டுமே கிடைத்ததாகவும், விசாரணையின் பின்னர் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால் முன்னாள் அதிகாரிகள்பல ஊழியர்கள் அவதிப்பட்டதாகக் கூறியுள்ள நிலையில், அக்காலகட்டத்தில் சுமார் 47 விழுக்காடு ஊழியர்கள் பணியிடத் துன்புறுத்தலை அனுபவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது உள்துறை அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றும் அந்தோனியா ரோமியோ, சவாலான பணிகளைச் செய்து முடிக்கும் திறமை கொண்டவர் என சிலர் பாராட்டினாலும், இத்தகைய சர்ச்சைகள் அவர் சிவில் சேவையின் மிக உயர்ந்த பதவியான அமைச்சரவை செயலாளர் பதவிக்கான நியமனத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

Posted by - February 19, 2026 0
இராணுவச் சட்டத்தை திணிக்க முயற்சித்தன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை…

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இளம் வயதில் எழுதிய கடிதம் ஏலத்திற்கு.!

Posted by - February 19, 2026 0
பிரித்தானியாவின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது சிறுவயதில் கையினால் எழுதிய அரிய கடிதம் ஒன்று,எதிர்வரும் 27-ஆம் திகதி ஏலத்திற்கு வரவுள்ளது.சுமார் 4,000 பவுண்டுகள் வரை ஏலம்…

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

Posted by - February 20, 2026 0
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக 33 பேர் கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் படை பணியமர்த்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து…

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை – பத்து நாட்கள் அவகாசம்!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தில் இணைவதற்கு வலியுறுத்தி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற அமைதிப்…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனீவாவில் இடம்பெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தை!

Posted by - February 23, 2026 0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற கூடிய இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.இதன்படி, ஜெனீவா நகரில் எதிர்வரும் 26-ஆம் திகதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *