அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை – பத்து நாட்கள் அவகாசம்!

409 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தில் இணைவதற்கு வலியுறுத்தி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற அமைதிப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். ஈரான் புதிய ஒப்பந்தத்திற்கு இணங்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்த அவர், இதற்காக 10 முதல் 15 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்த பத்து நாட்களில் இதுகுறித்து பல தகவல்கள் வெளியாகும் என்றும், வழங்கப்பட்ட காலம் போதுமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரான் தரப்பும் கடுமையான பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் குறிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு ஈரான்கடிதம் அனுப்பி, தாம் தன்னிச்சையாகப் போரைத் தொடங்கமாட்டோம் எனவும், ஆனால் இராணுவ ஆக்கிரமிப்பு அல்லது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் தற்காப்பு உரிமையின் அடிப்படையில் பதிலடி வழங்கும் உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

பாகிஸ்தானின் கராச்சியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு.!

Posted by - February 20, 2026 0
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் நேற்று இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரமழான்…

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

Posted by - February 16, 2026 0
லண்டனின் (Croydon) குரோய்டன் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று அதிகாலையில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இருபது…

தாலிபான் புதிய சட்டம்: பெண்கள் கடும் அதிர்ச்சி.!

Posted by - February 20, 2026 0
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கும் நிலையில், அவர்கள் கொண்டு வந்த புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டத்தின்படி கணவர்கள் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும்…

நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

Posted by - February 19, 2026 0
நார்தாம்ப்டனில் உள்ள ஒரு ஸ்கேட் பூங்காவில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பதின்ம வயது சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.பிரையர் ஹில்…

பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Posted by - February 19, 2026 0
உளவு பார்த்த குற்றச்சாட்டில், பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்த ஜோடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *