அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்.!

338 0

இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) கீழ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவனம், மார்சேய் ஃபோஸ் துறைமுகம் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியப் பயணத்தின் போது கையெழுத்தான இந்த ஒப்பந்தம், இந்தியா–ஐரோப்பா வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு டெல்லி நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் அறிமுகமான IMEC வழித்தடம், கடல், ரயில், டிஜிட்டல் மற்றும் தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கும் பன்முகப் போக்குவரத்து திட்டமாகும். தடையற்ற வர்த்தகப் போக்குவரத்தை எளிதாக்குதல் மற்றும் துறைமுகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் இதன் நோக்கமாகும்.

ஒப்பந்தத்தின் படி, முந்த்ரா துறைமுகம் மற்றும் ஹசிராதுறைமுகம் இந்தியா–மேற்கு ஆசியா இணைப்புக்கான கிழக்கு நுழைவாயில்களாக அமையும்; மார்சேய் ஃபோஸ் துறைமுகம் ஐரோப்பாவிற்கான மேற்கு நுழைவாயிலாகச் செயல்படும். சுமார் 70 மில்லியன் டன் கூடுதல் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட இந்த இணைப்பு, இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

Related Post

பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக அந்தோனியா ரோமியோ நியமிக்கப்படுவதில் சர்ச்சை.!

Posted by - February 19, 2026 0
பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் டேம் அந்தோனியா ரோமியோ, நியூயோர்க்கில் சிரேஷ்ட இராஜதந்திரியாக பணியாற்றிய காலத்தில் ஊழியர்களைத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பத்தாண்டுகளுக்கு…

பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Posted by - February 19, 2026 0
உளவு பார்த்த குற்றச்சாட்டில், பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்த ஜோடி…

ஈரான் விவகாரம் தீவிரம்: பிரித்தானியத் தளங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.!

Posted by - February 20, 2026 0
ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரசின் சாகோஸ் தீவுகள் தொடர்பான…

நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

Posted by - February 19, 2026 0
நார்தாம்ப்டனில் உள்ள ஒரு ஸ்கேட் பூங்காவில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பதின்ம வயது சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.பிரையர் ஹில்…

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

Posted by - February 19, 2026 0
இராணுவச் சட்டத்தை திணிக்க முயற்சித்தன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *