ஈரான் தொடர்பில் ட்ரம்ப் இறுதி முடிவு விரைவில்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படை குவிப்பு தீவிரம்.!

243 0

ரொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் நடவடிக்கையைத் தொடங்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஆயுதங்கள் மற்றும் படைத்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மட்டத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை, ஈரானுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் ட்ரம்ப் முனைப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. அலி காமெனீ தலைமையிலான ஈரான், அணுசக்தி திட்டங்களை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

2003ஆம் ஆண்டு ஈராக் போர்க்கு பின்னர் நடைபெறக்கூடிய மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக இது அமையக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. மத்திய கிழக்கு தளங்களுக்கு இரண்டு விமானம்தாங்கிக் கப்பல்கள், பல போர்க்கப்பல்கள், மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

F-35, F-22, F-16 போன்ற மேம்பட்ட போர் விமானங்களும் அப்பகுதிக்குத் திரட்டப்பட்டுள்ளன. மேலும், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், ஈரான் இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் இறுதி முடிவு குறித்து உலகளாவிய கவனம் திரண்டுள்ளது.

Related Post

இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த முன்னாள் கேப்டன்கள் !

Posted by - February 19, 2026 0
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை – பத்து நாட்கள் அவகாசம்!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தில் இணைவதற்கு வலியுறுத்தி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற அமைதிப்…

தாலிபான் புதிய சட்டம்: பெண்கள் கடும் அதிர்ச்சி.!

Posted by - February 20, 2026 0
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கும் நிலையில், அவர்கள் கொண்டு வந்த புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டத்தின்படி கணவர்கள் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும்…

மலேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

Posted by - February 23, 2026 0
மலேசியாவின் சபா மாநிலக் கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட…

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் கொ*லை- மெக்சிகோவில் கலவரம்.!

Posted by - February 23, 2026 0
மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் நபரான ‘ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் நெமேசியோ ஒஸ்குவேரா செர்வான்டெஸ் (எல் மெஞ்சோ), இராணுவத்தின் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *