கிறிஸ்மஸுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவரின் உடல் ஏர் ஆற்றில் (River Ayr) கண்டெடுப்பு!

224 0

கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாலை சுமார் 03.10 மணியளவில் இந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

உடலை முறைப்படி அடையாளம் காணும் பணிகள் இன்னும் நடைபெறவில்லை என்றாலும், காணாமல் போன 33 வயதான ஜேசன் ஆண்டர்சன் (Jason Anderson) என்பவரின் குடும்பத்தாருக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரேதப் பரிசோதனை அறிக்கை வரும் வரை, இந்த மரணம் “விளக்க முடியாதது” (unexplained) என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜேசன் ஆண்டர்சன் (Jason Anderson) கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி கேட்ரின் (Catrine) பகுதியில் கடைசியாகக் காணப்பட்டார்.

ஆறு நாட்களுக்குப் பின்னர் , கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி அன்று அவர் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் காணாமல் போனது முதல், காவல்துறை அப்பகுதியில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தும், வீடு வீடாகச் சென்றும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தத் தேடுதல் பணியில் காவல்துறை ஹெலிகாப்டர், ட்ரோன்கள் (Drones), மீட்புக் குழுக்கள்,
குவாட் பைக்குகளில் (Quad bikes) சென்ற அதிகாரிகள் என பலரும் ஈடுபட்டிருந்தனர்.

Related Post

பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக அந்தோனியா ரோமியோ நியமிக்கப்படுவதில் சர்ச்சை.!

Posted by - February 19, 2026 0
பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் டேம் அந்தோனியா ரோமியோ, நியூயோர்க்கில் சிரேஷ்ட இராஜதந்திரியாக பணியாற்றிய காலத்தில் ஊழியர்களைத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பத்தாண்டுகளுக்கு…

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து .!

Posted by - February 23, 2026 0
நேபாளத்தில் போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.நேபாளத்தில் இன்று (23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை…

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கொடுத்துக் கொலை

Posted by - February 16, 2026 0
ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி ,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு ‘தவளை விஷமே’ காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட…

ஈரான் விவகாரம் தீவிரம்: பிரித்தானியத் தளங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.!

Posted by - February 20, 2026 0
ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரசின் சாகோஸ் தீவுகள் தொடர்பான…

நைஜீரிய படையினருக்கு பயிற்சி அளிக்க படையினரை அனுப்ப திட்டம் – அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் நடவடிக்கை.!

Posted by - February 19, 2026 0
தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் நைஜீரியப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவென பென்டகன் இருநூறு படையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். அமெரிக்கா அனுப்பி வைக்கும் படையினர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *