பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

224 0

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளில் நிலவும் கடும் உறைபனி காரணமாக மெட் ஆபீஸ் (Met Office) புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஸ்காட்லாந்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் இரவு நேரங்களில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே (Below freezing) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எச்சரிக்கை ஞாயிறு இரவு 20:00 மணி முதல் திங்கள் காலை 10:00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில் ஆர்க்டிக் பகுதிகளில் இருந்து வீசிய குளிர்ந்த காற்று நாடு முழுவதும் பரவியதால், பனிப்பொழிவு மற்றும் உறைபனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

மழை பெய்து வருவதால், சாலைகளில் ‘பிளாக் ஐஸ்’ எனப்படும் கண்ணுக்குத் தெரியாத வழுக்கும் பனிப் படலம் உருவாக வாய்ப்புள்ளது.

இதனால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பயணிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இங்கிலாந்து முழுவதும் சுற்றுச்சூழல் முகாமையால் (Environment Agency) 74 வெள்ள எச்சரிக்கைகளும், 195 வெள்ள விழிப்புணர்வுகளும் விடுக்கப்பட்டுள்ளன.

இவை பெரும்பாலும் தெற்கு மற்றும் மத்திய (Midlands) பகுதிகளில் நிலவுகின்றன.

இதேவேளை, சென்ட்ரல் (Central), டேஸைட் மற்றும் ஃபைஃப் (Tayside & Fife), கிராம்பியன் (Grampian), ஹைலேண்ட்ஸ் (Highlands) தென்மேற்கு ஸ்காட்லாந்து (South West Scotland) ஸ்ட்ராத்க்லைட் (Strathclyde)
வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்ட் (Northumberland) போன்ற பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் முகமையின் வெள்ளப் பணி மேலாளர் ஜொனாதன் டே கூறுகையில், சுமார் 24,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன எனவும் இருப்பினும் ஏறத்தாழ 330 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் வேல்ஸிலும் (Wales) மூன்று பகுதிகளில் வெள்ள விழிப்புணர்வு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Post

பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Posted by - February 19, 2026 0
உளவு பார்த்த குற்றச்சாட்டில், பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்த ஜோடி…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனீவாவில் இடம்பெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தை!

Posted by - February 23, 2026 0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற கூடிய இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.இதன்படி, ஜெனீவா நகரில் எதிர்வரும் 26-ஆம் திகதி…

அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்.!

Posted by - February 19, 2026 0
இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) கீழ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவனம், மார்சேய் ஃபோஸ் துறைமுகம் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. பிரெஞ்சு…

குடியேற்ற விதிகளை மீண்டும் மாற்றியமைக்கும் கனடா!

Posted by - February 19, 2026 0
ஆராய்ச்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் விமானப் போக்குவரத்து வரையிலான துறைகளில் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கும், சில இராணுவ ஆட்சேர்ப்புகளைச் சேர்ப்பதற்கும் கனடா புதன்கிழமை (19) புதிய…

ஈரான் தொடர்பில் ட்ரம்ப் இறுதி முடிவு விரைவில்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படை குவிப்பு தீவிரம்.!

Posted by - February 19, 2026 0
ரொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் நடவடிக்கையைத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *