பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

151 0

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளில் நிலவும் கடும் உறைபனி காரணமாக மெட் ஆபீஸ் (Met Office) புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஸ்காட்லாந்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் இரவு நேரங்களில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே (Below freezing) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எச்சரிக்கை ஞாயிறு இரவு 20:00 மணி முதல் திங்கள் காலை 10:00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில் ஆர்க்டிக் பகுதிகளில் இருந்து வீசிய குளிர்ந்த காற்று நாடு முழுவதும் பரவியதால், பனிப்பொழிவு மற்றும் உறைபனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

மழை பெய்து வருவதால், சாலைகளில் ‘பிளாக் ஐஸ்’ எனப்படும் கண்ணுக்குத் தெரியாத வழுக்கும் பனிப் படலம் உருவாக வாய்ப்புள்ளது.

இதனால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பயணிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இங்கிலாந்து முழுவதும் சுற்றுச்சூழல் முகாமையால் (Environment Agency) 74 வெள்ள எச்சரிக்கைகளும், 195 வெள்ள விழிப்புணர்வுகளும் விடுக்கப்பட்டுள்ளன.

இவை பெரும்பாலும் தெற்கு மற்றும் மத்திய (Midlands) பகுதிகளில் நிலவுகின்றன.

இதேவேளை, சென்ட்ரல் (Central), டேஸைட் மற்றும் ஃபைஃப் (Tayside & Fife), கிராம்பியன் (Grampian), ஹைலேண்ட்ஸ் (Highlands) தென்மேற்கு ஸ்காட்லாந்து (South West Scotland) ஸ்ட்ராத்க்லைட் (Strathclyde)
வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்ட் (Northumberland) போன்ற பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் முகமையின் வெள்ளப் பணி மேலாளர் ஜொனாதன் டே கூறுகையில், சுமார் 24,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன எனவும் இருப்பினும் ஏறத்தாழ 330 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் வேல்ஸிலும் (Wales) மூன்று பகுதிகளில் வெள்ள விழிப்புணர்வு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Post

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இளம் வயதில் எழுதிய கடிதம் ஏலத்திற்கு.!

Posted by - February 19, 2026 0
பிரித்தானியாவின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது சிறுவயதில் கையினால் எழுதிய அரிய கடிதம் ஒன்று,எதிர்வரும் 27-ஆம் திகதி ஏலத்திற்கு வரவுள்ளது.சுமார் 4,000 பவுண்டுகள் வரை ஏலம்…

இந்தியா – பாகிஸ்தான் மோதலைத் தணிப்பதற்கு ட்ரம்ப் வலியுறுத்தல்.!

Posted by - February 20, 2026 0
2025 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற…

பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Posted by - February 19, 2026 0
உளவு பார்த்த குற்றச்சாட்டில், பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்த ஜோடி…

நியூயார்க் நகரத்தைத் தாக்கிய பனிப்புயல்.!

Posted by - February 23, 2026 0
அமெரிக்கா- நியூயார்க் நகரத்தைத் தாக்கிய கடுமையான பனிப்புயல் காரணமாக, நேற்று இரவு முதல் நகரம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி நகரத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகள்…

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

Posted by - February 16, 2026 0
லண்டனின் (Croydon) குரோய்டன் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று அதிகாலையில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இருபது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *