கிறிஸ்மஸுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவரின் உடல் ஏர் ஆற்றில் (River Ayr) கண்டெடுப்பு!

169 0

கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாலை சுமார் 03.10 மணியளவில் இந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

உடலை முறைப்படி அடையாளம் காணும் பணிகள் இன்னும் நடைபெறவில்லை என்றாலும், காணாமல் போன 33 வயதான ஜேசன் ஆண்டர்சன் (Jason Anderson) என்பவரின் குடும்பத்தாருக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரேதப் பரிசோதனை அறிக்கை வரும் வரை, இந்த மரணம் “விளக்க முடியாதது” (unexplained) என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜேசன் ஆண்டர்சன் (Jason Anderson) கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி கேட்ரின் (Catrine) பகுதியில் கடைசியாகக் காணப்பட்டார்.

ஆறு நாட்களுக்குப் பின்னர் , கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி அன்று அவர் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் காணாமல் போனது முதல், காவல்துறை அப்பகுதியில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தும், வீடு வீடாகச் சென்றும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தத் தேடுதல் பணியில் காவல்துறை ஹெலிகாப்டர், ட்ரோன்கள் (Drones), மீட்புக் குழுக்கள்,
குவாட் பைக்குகளில் (Quad bikes) சென்ற அதிகாரிகள் என பலரும் ஈடுபட்டிருந்தனர்.

Related Post

ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

Posted by - February 19, 2026 0
அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு செலவுகள் மற்றும் பொருளாதாரம் குறித்த அவநம்பிக்கை காரணமாக ஊழியர்களின் பணி நேரத்தையும் வேலைகளையும் குறைக்க இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலான பெரிய…

ஈரான் விவகாரம் தீவிரம்: பிரித்தானியத் தளங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.!

Posted by - February 20, 2026 0
ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரசின் சாகோஸ் தீவுகள் தொடர்பான…

ரஷ்யா – உக்ரைன் மோதல் மீண்டும் தீவிரம்.!

Posted by - February 23, 2026 0
பெப்ரவரி 22, 2026 அன்று, ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய இரவு தாக்குதலை நடத்தியது . இதில் 50 ஏவுகணைகள் மற்றும் 297 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.உக்ரைன் விமானப்படை…

குடியேற்ற விதிகளை மீண்டும் மாற்றியமைக்கும் கனடா!

Posted by - February 19, 2026 0
ஆராய்ச்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் விமானப் போக்குவரத்து வரையிலான துறைகளில் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கும், சில இராணுவ ஆட்சேர்ப்புகளைச் சேர்ப்பதற்கும் கனடா புதன்கிழமை (19) புதிய…

அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்.!

Posted by - February 19, 2026 0
இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) கீழ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவனம், மார்சேய் ஃபோஸ் துறைமுகம் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. பிரெஞ்சு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *