ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

198 0

அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு செலவுகள் மற்றும் பொருளாதாரம் குறித்த அவநம்பிக்கை காரணமாக ஊழியர்களின் பணி நேரத்தையும் வேலைகளையும் குறைக்க இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பெரும்பாலான பெரிய சில்லறை விற்பனையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக அமைப்பான பிரிட்டிஷ் சில்லறை கூட்டமைப்பு நடத்திய அண்மைய கணக்கெடுப்பின்படி, சில்லறை நிறுவனங்களின் நிதித் தலைவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அதாவது 61 சதவீதம் பேர் வேலை நேரத்தைக் குறைக்க அல்லது கூடுதல் நேரத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவற்றுள் 55 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தலைமை அலுவலக வேலைகளைக் குறைப்பதாகவும், 42 சதவீதம் பேர் சில்லறை விற்பனை நிலையங்களில் வேலைகளைக் குறைப்பதாகவும் கூறினர்.

AI சந்தைப்படுத்தல் மற்றும் பங்கு மேலாண்மை கருவிகள் முதல் தனியாங்கி பணம் சேகரிக்கும் கருவிகள் வரை புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக சில்லறை விற்பனைத் துறை கடந்த ஆண்டில் 74,000 வேலைகளை இழந்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு செலவுகள் 5 பில்லியன் பவுண்ட்ஸ் அதிகரித்த பின்னர், முதலாளியின் தேசிய காப்பீட்டு பங்களிப்புகள் அதிகரிப்பு மற்றும் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்ததன் விளைவாக, தொழிலாளர் தேவைகளைக் குறைக்க அதிக தொழில்நுட்பம் மற்றும் பிற உற்பத்தித்திறன் தந்திரங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post

ஜேர்மனியில் புகலிட கோரிக்கை யாளர்களுக்கு வேலை வாய்ப்பு- புதிய திட்டம் அறிவிப்பு.!

Posted by - February 23, 2026 0
ஜேர்மனி அரசு, நாட்டில் புகலிடம் கோரும் புலம்பெயர் மக்கள் விரைவில் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், புலம்பெயர் மக்கள் ஜேர்மனிக்கு…

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 11 பேர் உயிரிழப்பு!

Posted by - February 16, 2026 0
காசாவில் ஞாயிற்றுக்கிழமை (15) காலை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பதினொரு பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு காசாவில் ஒரு…

பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Posted by - February 19, 2026 0
உளவு பார்த்த குற்றச்சாட்டில், பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்த ஜோடி…

கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த…

நைஜீரியாவில் வெடித்துச் சிதறிய சுரங்கம் – தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
நைஜீரியா,ப்ளாட் டியூ மாகாணம், வேஸ் பகுதியிலுள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *