தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது.!

411 0

தேசிய தாவரவியல் பூங்காக்கள் 2025ல் 1.394 பில்லியன் ரூபா வருமானம் சம்பாதித்தது – கடந்த 2025ஆம் ஆண்டில் தேசிய தாவரவியல் பூங்காக்களின் மொத்த வருமானம் 1.394 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வருமானம் 2024ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7% அதிகரித்துள்ளது, அதற்கான முக்கிய காரணமாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘

டித்வா’ புயலின் தாக்கம் இருந்தபோதிலும், பூங்காக்களின் இயற்கை மற்றும் தாவரவியல் ஈர்ப்புகள் மூலம் வருமானம் உயர்ந்துள்ளது. திணைக்களத்தின் கீழ் பேராதனை, ஹக்கலா, கம்பஹா, சீதாவக்க ஈர வலய, மிரிஜ்ஜவில வறண்ட வலய மற்றும் கணேவத்த வன மூலிகைத் தோட்டங்கள் நிர்வகிக்கப்படுகின்றன; இதில், பேராதனை பூங்காவிற்கு கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக அனைத்து பூங்காக்களையும் பார்வையிட இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்டசுற்றுலாப் பயணிகள் வந்தனர். நுழைவுக் கட்டணம், தாவர விற்பனை மற்றும் இதர வசதிகள் மூலம் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Post

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

மார்ச் 12 முதல் அதிகளவு சமையல் எரிவாயு சந்தைக்கு!

Posted by - February 20, 2026 0
எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கடந்த…

எவரையும் கைவிடாத செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் – புதுடில்லியில் அநுர அதிரடிப் பிரகடனம்

Posted by - February 19, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லியில் நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நெறிமுறைகள் மற்றும்…

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

Posted by - February 24, 2026 0
கடந்த 6 வருடங்களாக தாமதிக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் குறித்து…

மீனவர்களுக்கு மீன்பிடி வலைத் தொகுதி வழங்கும் நிகழ்வு.!

Posted by - February 19, 2026 0
மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மன்னார் மாவட்ட கடற்றொழில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *