சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

90 0

நாடு முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக 33 பேர் கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் படை பணியமர்த்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்த இந்த புதிய வான்வழி கண்காணிப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.சந்தேகத்திற்குரிய சட்டவிரோத கழிவு இடங்களின் விரிவான வரைபடங்களை உருவாக்க, 33 பயிற்சி பெற்ற விமானிகள் மற்றும் லேசர் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ட்ரோன்களைக் கொண்ட புதிய ட்ரோன் படைகள் செயல்படுத்தப்படும்.

இது தவிர கழிவுகளை ஏற்றிச் செல்லும் கழிவு லொறிகள் உரிய அனுமதிகளைப் பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும் இந்த புதிய ட்ரோன் படை பயன்படுத்தப்படும்.

இது சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை மிகவும் திறம்பட கண்டறிய வழி வகுக்கும்.இங்கிலாந்தில் சட்டவிரோத கழிவுகளை கொட்டுவது தொடர்பான விசாரணையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுச் சூழல் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி வந்துள்ளது.

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதால் இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு 1 பில்லியன் பவுண்ட்ஸ் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post

நைஜீரியாவில் வெடித்துச் சிதறிய சுரங்கம் – தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
நைஜீரியா,ப்ளாட் டியூ மாகாணம், வேஸ் பகுதியிலுள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில்…

மத்திய கிழக்கில் பதற்றம்: ஜேர்மன் படைகள் எர்பில் நகரிலிருந்து தற்காலிக விலகல்.!

Posted by - February 20, 2026 0
மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான பதற்றம் அதிகரிப்பதால், ஜேர்மனி தனது படைகளின் அளவைக் குறைக்கும் முடிவெடுத்துள்ளது. குர்திஸ்தான் பகுதியிலுள்ள ஈராக்கின் தலைநகரான எர்பில் நகரில் ஜேர்மன் ராணுவம்…

பாகிஸ்தானின் கராச்சியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு.!

Posted by - February 20, 2026 0
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் நேற்று இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரமழான்…

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

Posted by - February 16, 2026 0
லண்டனின் (Croydon) குரோய்டன் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று அதிகாலையில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இருபது…

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் கொ*லை- மெக்சிகோவில் கலவரம்.!

Posted by - February 23, 2026 0
மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் நபரான ‘ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் நெமேசியோ ஒஸ்குவேரா செர்வான்டெஸ் (எல் மெஞ்சோ), இராணுவத்தின் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *