ஜேர்மனியில் புகலிட கோரிக்கை யாளர்களுக்கு வேலை வாய்ப்பு- புதிய திட்டம் அறிவிப்பு.!

401 0

ஜேர்மனி அரசு, நாட்டில் புகலிடம் கோரும் புலம்பெயர் மக்கள் விரைவில் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், புலம்பெயர் மக்கள் ஜேர்மனிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுவரை, புலம்பெயர்ந்தோர் வேலை பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. புதிய திட்டத்தின் மூலம், அவர்கள் புகலிடம் தொடர்பான விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் இருந்தாலும் வேலை செய்ய முடியும்.இங்கு வரும் அனைவரும் விரைவில் வேலை செய்ய வேண்டும். வேலை வாய்ப்பே சிறந்த ஒருங்கிணைப்பு வழி,” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் சம்பாதிக்கும் வருமானம், அவர்கள் பெறும் சமூக நலன்களுடன் சமநிலைப்படுத்தப்படும். ஆனால் தவறான தகவல் வழங்குபவர்கள் அல்லது அதிகாரிகளுடன் ஒத்துழைக்காதவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படமாட்டார்கள்.

இந்த மாற்றம், ஜேர்மனியில் வேலைவாய்ப்பு சந்தையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதேசமயம், சமூகத்தில் புலம்பெயர்ந்தோர் விரைவில் இணைந்து வாழ உதவும்.சமூகத்தில் ஒருங்கிணைப்பு, வேலை வாய்ப்பின் மூலம் எளிதாகும் என அரசு நம்புகிறது. இந்த திட்டம், ஜேர்மனியின் குடியேற்றக் கொள்கையில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Related Post

பாகிஸ்தானின் கராச்சியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு.!

Posted by - February 20, 2026 0
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் நேற்று இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரமழான்…

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை – பத்து நாட்கள் அவகாசம்!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தில் இணைவதற்கு வலியுறுத்தி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற அமைதிப்…

தாலிபான் புதிய சட்டம்: பெண்கள் கடும் அதிர்ச்சி.!

Posted by - February 20, 2026 0
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கும் நிலையில், அவர்கள் கொண்டு வந்த புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டத்தின்படி கணவர்கள் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும்…

மத்திய கிழக்கில் பதற்றம்: ஜேர்மன் படைகள் எர்பில் நகரிலிருந்து தற்காலிக விலகல்.!

Posted by - February 20, 2026 0
மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான பதற்றம் அதிகரிப்பதால், ஜேர்மனி தனது படைகளின் அளவைக் குறைக்கும் முடிவெடுத்துள்ளது. குர்திஸ்தான் பகுதியிலுள்ள ஈராக்கின் தலைநகரான எர்பில் நகரில் ஜேர்மன் ராணுவம்…

ஈரான் விவகாரம் தீவிரம்: பிரித்தானியத் தளங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.!

Posted by - February 20, 2026 0
ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரசின் சாகோஸ் தீவுகள் தொடர்பான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *