சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

228 0

நாடு முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக 33 பேர் கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் படை பணியமர்த்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்த இந்த புதிய வான்வழி கண்காணிப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.சந்தேகத்திற்குரிய சட்டவிரோத கழிவு இடங்களின் விரிவான வரைபடங்களை உருவாக்க, 33 பயிற்சி பெற்ற விமானிகள் மற்றும் லேசர் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ட்ரோன்களைக் கொண்ட புதிய ட்ரோன் படைகள் செயல்படுத்தப்படும்.

இது தவிர கழிவுகளை ஏற்றிச் செல்லும் கழிவு லொறிகள் உரிய அனுமதிகளைப் பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும் இந்த புதிய ட்ரோன் படை பயன்படுத்தப்படும்.

இது சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை மிகவும் திறம்பட கண்டறிய வழி வகுக்கும்.இங்கிலாந்தில் சட்டவிரோத கழிவுகளை கொட்டுவது தொடர்பான விசாரணையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுச் சூழல் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி வந்துள்ளது.

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதால் இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு 1 பில்லியன் பவுண்ட்ஸ் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post

நைஜீரியாவில் வெடித்துச் சிதறிய சுரங்கம் – தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
நைஜீரியா,ப்ளாட் டியூ மாகாணம், வேஸ் பகுதியிலுள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில்…

ரஷ்யா – உக்ரைன் மோதல் மீண்டும் தீவிரம்.!

Posted by - February 23, 2026 0
பெப்ரவரி 22, 2026 அன்று, ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய இரவு தாக்குதலை நடத்தியது . இதில் 50 ஏவுகணைகள் மற்றும் 297 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.உக்ரைன் விமானப்படை…

தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவு.!

Posted by - February 20, 2026 0
தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தஜிகிஸ்தானில் நேற்று இரவு 11.24 மணியளவில் 3.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில…

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை – பத்து நாட்கள் அவகாசம்!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தில் இணைவதற்கு வலியுறுத்தி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற அமைதிப்…

தாலிபான் புதிய சட்டம்: பெண்கள் கடும் அதிர்ச்சி.!

Posted by - February 20, 2026 0
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கும் நிலையில், அவர்கள் கொண்டு வந்த புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டத்தின்படி கணவர்கள் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *