ஈரான் விவகாரம் தீவிரம்: பிரித்தானியத் தளங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.!

263 0

ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரசின் சாகோஸ் தீவுகள் தொடர்பான ஒப்பந்தத்தை முடக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.


சர்வதேசச் சட்டம் மீறப்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, டியாகோ கார்சியா தீவு அல்லது குளோசெஸ்டர்ஷையர் மாகாணத்தில் அமைந்துள்ள அரச வான்படைத் தளத்திலிருந்து எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்க ஜனாதிபதியை எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டார்மரின் இந்த முடிவு, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சாகோஸ் தீவுகளை மொரீஷியஸ் நாட்டிடம் ஒப்படைக்கும் திட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.முன்னதாக, ஈரான் கடற்பரப்பிற்கு அருகில் பெரும் போர்க்கப்பலை நிலைநிறுத்திய ட்ரம்ப், அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமைதி ஒப்பந்தத்தை பத்து நாட்களுக்குள் எட்ட வேண்டும் என ஈரான் அரசை எச்சரித்திருந்தார்.

இல்லையெனில் கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதன்கிழமை இரவு சமூக வலைத்தளங்களில் தனது கருத்தை வெளியிட்ட ட்ரம்ப், முக்கியமான இந்தத் தீவின் கட்டுப்பாட்டை இழப்பது பெரிய தவறாகும் என பிரித்தானிய அரசை எச்சரித்துள்ளார்.

மேலும், ஈரான் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால், டியாகோ கார்சியா உள்ளிட்ட தளங்களிலிருந்து தாக்குதல் நடத்த வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், ஈரான் மீது அமெரிக்கா மேற்கொள்ளக்கூடிய இராணுவ நடவடிக்கைகள், பிரித்தானியா உட்பட பல நாடுகளை பாதுகாப்பதற்காகவே என ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

Related Post

பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Posted by - February 19, 2026 0
உளவு பார்த்த குற்றச்சாட்டில், பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்த ஜோடி…

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

Posted by - February 16, 2026 0
லண்டனின் (Croydon) குரோய்டன் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று அதிகாலையில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இருபது…

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து .!

Posted by - February 23, 2026 0
நேபாளத்தில் போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.நேபாளத்தில் இன்று (23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை…

மலேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

Posted by - February 23, 2026 0
மலேசியாவின் சபா மாநிலக் கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட…

கிறிஸ்மஸுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவரின் உடல் ஏர் ஆற்றில் (River Ayr) கண்டெடுப்பு!

Posted by - February 16, 2026 0
கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *