நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் F.U. வுட்லர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இலங்கையில் வாகன ஓட்டும்போது ஏற்பட்ட வீதி விபத்துகளில் மொத்தம் 5 வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.
, மேலும் 7 கடுமையான விபத்துகள் மற்றும் 78 சுற்றுலாப் பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளானனர் என அவர் குறிப்பிட்டார்.விசாரணைகளில், வாகன சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் இருவரும் மோட்டார் போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்டினர் மீது வழக்கு தொடரப்படும்.
மேலும், ஒரு மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனம் வாடகைக்கு விட வேண்டும் என்றால், வெளிநாட்டு நபர் சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம், இலங்கையில் வசிக்கும் வெளிநாட்வாசிக்கு வழங்கப்படும் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம், அல்லது மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
இந்த மாற்றுச் சான்றிதழ் வேரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலும், கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சிறப்பு கருமபீடங்களிலும் வழங்கப்படும் என்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் தெரிவித்தார்.
