பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக அந்தோனியா ரோமியோ நியமிக்கப்படுவதில் சர்ச்சை.!

439 0

பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் டேம் அந்தோனியா ரோமியோ, நியூயோர்க்கில் சிரேஷ்ட இராஜதந்திரியாக பணியாற்றிய காலத்தில் ஊழியர்களைத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பத்தாண்டுகளுக்கு முன்பு நியூயோர்க்கிற்கான பிரித்தானிய தூதராக இருந்தபோது, ஊழியர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதாகவும், பணியிடத்தில் பயம் மற்றும் கவலை நிலவிய சூழலை உருவாக்கியதாகவும் ஆவணங்கள் வெளிவந்துள்ளன.

மேலும், அரசாங்க நலன்களை விட தனிப்பட்ட சுய விளம்பரத்திற்கும் சமூக வலைத்தளச் செயல்பாடுகளுக்கும் முன்னுரிமை வழங்கியதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இருப்பினும், இவ்விவகாரத்தில் ஒரே ஒரு அதிகாரப்பூர்வ முறைப்பாடு மட்டுமே கிடைத்ததாகவும், விசாரணையின் பின்னர் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால் முன்னாள் அதிகாரிகள்பல ஊழியர்கள் அவதிப்பட்டதாகக் கூறியுள்ள நிலையில், அக்காலகட்டத்தில் சுமார் 47 விழுக்காடு ஊழியர்கள் பணியிடத் துன்புறுத்தலை அனுபவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது உள்துறை அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றும் அந்தோனியா ரோமியோ, சவாலான பணிகளைச் செய்து முடிக்கும் திறமை கொண்டவர் என சிலர் பாராட்டினாலும், இத்தகைய சர்ச்சைகள் அவர் சிவில் சேவையின் மிக உயர்ந்த பதவியான அமைச்சரவை செயலாளர் பதவிக்கான நியமனத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இளம் வயதில் எழுதிய கடிதம் ஏலத்திற்கு.!

Posted by - February 19, 2026 0
பிரித்தானியாவின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது சிறுவயதில் கையினால் எழுதிய அரிய கடிதம் ஒன்று,எதிர்வரும் 27-ஆம் திகதி ஏலத்திற்கு வரவுள்ளது.சுமார் 4,000 பவுண்டுகள் வரை ஏலம்…

கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த…

மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள் அமெரிக்கா பிரச்சினைகளை உருவாக்குகிறது எனக் கருத்து.!

Posted by - February 20, 2026 0
சமீபத்திய ஆய்வில், கனடாவில் பெரும்பான்மையானோர் அமெரிக்காவை கனடாவின் கூட்டாளர் அல்ல என்றும், ரஷ்யாவைவிட உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் கருதுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும்…

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

Posted by - February 16, 2026 0
லண்டனின் (Croydon) குரோய்டன் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று அதிகாலையில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இருபது…

தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவு.!

Posted by - February 20, 2026 0
தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தஜிகிஸ்தானில் நேற்று இரவு 11.24 மணியளவில் 3.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *