ரொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் நடவடிக்கையைத் தொடங்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஆயுதங்கள் மற்றும் படைத்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மட்டத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
அதேவேளை, ஈரானுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் ட்ரம்ப் முனைப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. அலி காமெனீ தலைமையிலான ஈரான், அணுசக்தி திட்டங்களை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
2003ஆம் ஆண்டு ஈராக் போர்க்கு பின்னர் நடைபெறக்கூடிய மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக இது அமையக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. மத்திய கிழக்கு தளங்களுக்கு இரண்டு விமானம்தாங்கிக் கப்பல்கள், பல போர்க்கப்பல்கள், மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
F-35, F-22, F-16 போன்ற மேம்பட்ட போர் விமானங்களும் அப்பகுதிக்குத் திரட்டப்பட்டுள்ளன. மேலும், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், ஈரான் இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் இறுதி முடிவு குறித்து உலகளாவிய கவனம் திரண்டுள்ளது.
