ஈரான் தொடர்பில் ட்ரம்ப் இறுதி முடிவு விரைவில்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படை குவிப்பு தீவிரம்.!

359 0

ரொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் நடவடிக்கையைத் தொடங்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஆயுதங்கள் மற்றும் படைத்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மட்டத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை, ஈரானுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் ட்ரம்ப் முனைப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. அலி காமெனீ தலைமையிலான ஈரான், அணுசக்தி திட்டங்களை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

2003ஆம் ஆண்டு ஈராக் போர்க்கு பின்னர் நடைபெறக்கூடிய மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக இது அமையக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. மத்திய கிழக்கு தளங்களுக்கு இரண்டு விமானம்தாங்கிக் கப்பல்கள், பல போர்க்கப்பல்கள், மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

F-35, F-22, F-16 போன்ற மேம்பட்ட போர் விமானங்களும் அப்பகுதிக்குத் திரட்டப்பட்டுள்ளன. மேலும், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், ஈரான் இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் இறுதி முடிவு குறித்து உலகளாவிய கவனம் திரண்டுள்ளது.

Related Post

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை – பத்து நாட்கள் அவகாசம்!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தில் இணைவதற்கு வலியுறுத்தி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற அமைதிப்…

நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

Posted by - February 19, 2026 0
நார்தாம்ப்டனில் உள்ள ஒரு ஸ்கேட் பூங்காவில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பதின்ம வயது சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.பிரையர் ஹில்…

சீன தொழிலதிபருடன் இரகசிய சந்திப்பு – பெரு ஜனாதிபதி பதவி நீக்கம்.!

Posted by - February 19, 2026 0
சீன தொழிலதிபருடன் இரகசியமாக சந்தித்ததாக குற்றச்சாட்டுகளில், பெருவின் இடைக்கால ஜனாதிபதி ஜோஸ் ஜெரி பதவியேற்ற நான்கே மாதங்களில் பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜெரி இரவு…

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கொடுத்துக் கொலை

Posted by - February 16, 2026 0
ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி ,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு ‘தவளை விஷமே’ காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட…

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

Posted by - February 19, 2026 0
இராணுவச் சட்டத்தை திணிக்க முயற்சித்தன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *