மீண்டும் ஒரு இருண்ட காலம் உருவாக இடமளிக்காதீர்கள் – மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு கோடீஸ்வரன் எம்.பி. கடும் எதிர்ப்பு.!

236 0

இலங்கையில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை மீண்டும் ஒருபோதும் உருவாகக் கூடாது எனவும், அதனைத் தடுக்கும் வகையில் அரசு முறையான வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.


நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ‘வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்’ தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,“நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை 13.8 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் பரிந்துரைசெய்துள்ளது. இவ்வாறான கட்டண உயர்வு அடிமட்ட மக்கள்மீதே கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இதனால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.


கடந்த காலப் பொருளாதார நெருக்கடிகளால் நாடு பாரிய பின்னடைவைச் சந்தித்தது. அத்தகைய இருண்ட காலம் மீண்டும் உருவாக அரசு இடமளிக்கக் கூடாது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக மின்சார சபைக்கு 5 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகளின் தவறுகளால் ஏற்படும் இந்நட்டத்தை ஏழை மக்களின் மீது சுமத்துவது நியாயமற்றதாகும். எனவே, நிலக்கரி இறக்குமதியில் வெளிப்படையானமற்றும் பொறுப்புணர்வுள்ள நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம்.


தற்போது பெய்து வரும் மழையினால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்த முடியாத நிலை காரணமாக விற்பனை செய்ய இயலாமல் திணறுகின்றனர்.

ஆகையால், பிரதேச ரீதியாக நெல் உலர்த்தும் இயந்திரங்களை நிறுவுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், தமது சொத்துக்களை அடகு வைத்தும் விற்றும் விவசாயத்தில் ஈடுபடும் இவர்களுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதோடு, நெல் உலர்த்தும் இயந்திரங்களுக்கான மின்சாரத்தை மானிய அடிப்படையில் வழங்கவும் அரசாங்கம் முன்வர வேண்டும்,” என வலியுறுத்தினார்.

Related Post

ஊழல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது.!

Posted by - February 20, 2026 0
“நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால் அங்கிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என மொட்டுக் கட்சி கூறுவது வேடிக்கையானது. அவர் சிறைக்குச் செல்வது தேர்தல் வெற்றிக்காக அல்ல,…

மருத்துவத்துறையில் எட்டு தங்கப்பதக்கங்களை பெற்ற மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் .!

Posted by - February 19, 2026 0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார். யாழ்.பல்கலைக்கழகப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட…

இந்தியப் பிரதமரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி.!

Posted by - February 20, 2026 0
புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (20) நண்பகல் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் சந்தித்தார். AI Impact 2026 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக…

கரைத்துரைப்பற்று பிரதேச சபை தொடர்பில் தமிழரசுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!

Posted by - February 19, 2026 0
முல்லைத்தீவு மாவட்டம், கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை நீக்கி, அதற்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தடுக்கக்…

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச விசாரணை கோரி 3287 நாட்கள் போராட்டம்.!

Posted by - February 20, 2026 0
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (20.02.2026) காலை 10 மணியளவில் A9 வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். 2009…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *