மீண்டும் ஒரு இருண்ட காலம் உருவாக இடமளிக்காதீர்கள் – மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு கோடீஸ்வரன் எம்.பி. கடும் எதிர்ப்பு.!

404 0

இலங்கையில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை மீண்டும் ஒருபோதும் உருவாகக் கூடாது எனவும், அதனைத் தடுக்கும் வகையில் அரசு முறையான வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.


நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ‘வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்’ தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,“நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை 13.8 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் பரிந்துரைசெய்துள்ளது. இவ்வாறான கட்டண உயர்வு அடிமட்ட மக்கள்மீதே கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இதனால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.


கடந்த காலப் பொருளாதார நெருக்கடிகளால் நாடு பாரிய பின்னடைவைச் சந்தித்தது. அத்தகைய இருண்ட காலம் மீண்டும் உருவாக அரசு இடமளிக்கக் கூடாது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக மின்சார சபைக்கு 5 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகளின் தவறுகளால் ஏற்படும் இந்நட்டத்தை ஏழை மக்களின் மீது சுமத்துவது நியாயமற்றதாகும். எனவே, நிலக்கரி இறக்குமதியில் வெளிப்படையானமற்றும் பொறுப்புணர்வுள்ள நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம்.


தற்போது பெய்து வரும் மழையினால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்த முடியாத நிலை காரணமாக விற்பனை செய்ய இயலாமல் திணறுகின்றனர்.

ஆகையால், பிரதேச ரீதியாக நெல் உலர்த்தும் இயந்திரங்களை நிறுவுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், தமது சொத்துக்களை அடகு வைத்தும் விற்றும் விவசாயத்தில் ஈடுபடும் இவர்களுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதோடு, நெல் உலர்த்தும் இயந்திரங்களுக்கான மின்சாரத்தை மானிய அடிப்படையில் வழங்கவும் அரசாங்கம் முன்வர வேண்டும்,” என வலியுறுத்தினார்.

Related Post

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

Posted by - February 26, 2026 0
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைவிட…

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

Posted by - February 20, 2026 0
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை,…

விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு – ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

Posted by - February 20, 2026 0
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி,…

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Posted by - February 21, 2026 0
புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மற்றும் இலங்கை…

ஹட்டன் பிரதான வீதியில் கோர விபத்து – மூன்று பிள்ளைகளின் தாய் பலி.!

Posted by - February 21, 2026 0
அவிசாவளை – ஹட்டன் பிரதான வீதியின் எட்டியாந்தோட்டை, தனகொலவத்த பகுதியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் சம்பவ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *