இந்திய நிதியுதவியுடன் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்: ஆளுநர் நன்றி தெரிவிப்பு.!

301 0

இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா. வேதநாயகன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.


வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சத்யஞ்சல் பாண்டே (இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர்) மற்றும் சாய்முரளி (யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல்) ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில், இந்திய நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்றிட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளின் அபிவிருத்தி, காரைநகர் படகுத் தள அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


அண்மையில் ஏற்பட்ட டித்வா பேரிடருக்குப் பின்னான உதவித் திட்டங்கள் மற்றும் இந்தியாவின் “அயலவருக்கு முன்னுரிமை” கொள்கையின் அடிப்படையிலான முன்னுரிமைகள் குறித்தும் பிரதி உயர்ஸ்தானிகர் விளக்கமளித்தார். சில கடனுதவித் திட்டங்கள் தற்போது நன்கொடைகளாக மாற்றப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.டித்வா பேரிடரின்போது இந்திய அரசு வழங்கிய உடனடி உதவிகளுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்ததுடன், தொடர்ச்சியான பங்களிப்புகளையும் பாராட்டினார்.

இந்திய நன்கொடையின் கீழ் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை தொடர்பான தகவல்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.
பலாலி விமான நிலைய முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை அரசு விசேட கவனம் செலுத்தி வரும் நிலையில், எதிர்கால விரிவாக்க நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளுக்

கு சாதகமான பதிலை வழங்கத் தயார் என பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கும் திட்டம் தொடர்பாக, கொள்கை நிலைப்பாடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவுடன் இந்திய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Related Post

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது

Posted by - February 20, 2026 0
கடந்த 2025ஆம் ஆண்டிலும் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின்…

மூலோபாய முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகை!

Posted by - February 16, 2026 0
சுற்றுலா, உற்பத்தி மற்றும் வேளாண் துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நிதி, பொருளாதார…

ஜோன்ஸ்டனுக்கும் , புதல்வர்களுக்கும் மார்ச் 6 வரை விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - February 21, 2026 0
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு திறந்து வைப்பு.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரிகுளம் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக, போரதீவுப்பற்று பிரதேசம் பகுதியில் உள்ள வேத்துச்சேனை பிரதான வீதி மீண்டும் சேதமடைந்துள்ளது.தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால்…

குடும்பத் தகராறு கொலையில் முடிவு: மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி.!

Posted by - February 21, 2026 0
கேகாலை மாவட்டம், தெரணியகலை – மாலிபொட தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் இடம்பெற்ற குடும்பத் தகராறு கொலைச் சம்பவமாக மாறியுள்ளது.மாலிபொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய, ஒரு பிள்ளையின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *