இந்திய நிதியுதவியுடன் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்: ஆளுநர் நன்றி தெரிவிப்பு.!

265 0

இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா. வேதநாயகன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.


வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சத்யஞ்சல் பாண்டே (இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர்) மற்றும் சாய்முரளி (யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல்) ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில், இந்திய நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்றிட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளின் அபிவிருத்தி, காரைநகர் படகுத் தள அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


அண்மையில் ஏற்பட்ட டித்வா பேரிடருக்குப் பின்னான உதவித் திட்டங்கள் மற்றும் இந்தியாவின் “அயலவருக்கு முன்னுரிமை” கொள்கையின் அடிப்படையிலான முன்னுரிமைகள் குறித்தும் பிரதி உயர்ஸ்தானிகர் விளக்கமளித்தார். சில கடனுதவித் திட்டங்கள் தற்போது நன்கொடைகளாக மாற்றப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.டித்வா பேரிடரின்போது இந்திய அரசு வழங்கிய உடனடி உதவிகளுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்ததுடன், தொடர்ச்சியான பங்களிப்புகளையும் பாராட்டினார்.

இந்திய நன்கொடையின் கீழ் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை தொடர்பான தகவல்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.
பலாலி விமான நிலைய முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை அரசு விசேட கவனம் செலுத்தி வரும் நிலையில், எதிர்கால விரிவாக்க நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளுக்

கு சாதகமான பதிலை வழங்கத் தயார் என பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கும் திட்டம் தொடர்பாக, கொள்கை நிலைப்பாடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவுடன் இந்திய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Related Post

டைனமைட் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது.!

Posted by - February 19, 2026 0
மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் ‘டைனமைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில்…

இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் விடயம்: சுயாதீன சர்வதேச விசாரணை கோரிக்கை – யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தல்.!

Posted by - February 21, 2026 0
வடமராட்சி ஊடக இல்லம், ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயத்தில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என…

சிவனடிபாத மலையில் உள்ள வனப் பகுதியில் திடீர் தீப்பரவல்.!

Posted by - February 19, 2026 0
இன்று சிவனடிபாத மலை உச்சிக்கு முன்னால் அமைந்துள்ள வனப் பகுதியில் இன்று (19) திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. நிலவும் கடும் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று…

அம்பாறையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை; தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்.!

Posted by - February 20, 2026 0
அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை பெய்து வருவதன் காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் முறிந்துள்ளதுடன்…

யட்டியாந்தோட்டையில் சுற்றுலா பேருந்து விபத்து

Posted by - February 20, 2026 0
யட்டியாந்தோட்டைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட தணகொலவத்த பகுதியில், தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (20) மாலை 4.00 மணியளவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *