விரைவில் தேர்தல் நடத்தப்படும்; செல்வாக்கு யாருக்கு என்பது தேர்தல் களத்தில் தெரியும்.!

224 0

மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு விடுத்துள்ள சவாலுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன உரிய முறையில் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக, இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, “பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திப் பாருங்கள். அதில் நாங்களே வெற்றி பெறுவோம்” என்று அரசுக்குச் சவால் விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பேராசிரியர் அபயரத்ன குறிப்பிட்டதாவது,
“தேர்தல்களைக் கண்டு இந்த அரசு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தடையாக இருந்த சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதிலேயே நாம் தற்போது கவனம் செலுத்தி வருகின்றோம்.

கடந்த காலங்களில் தேர்தல்களைத் தள்ளிப்போட்டவர்கள் இன்று எம்மைப் பார்த்து சவால் விடுப்பது வேடிக்கையானது. உரிய ஜனநாயக முறைப்படி, குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அன்றி, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படாத வகையில் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் செல்வாக்கு என்ன என்பது தேர்தல் களத்தில் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.” – என்றார்.

மேலும், மாகாண சபைத் தேர்தலுக்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், விரைவில் இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Post

மார்ச் 12 முதல் அதிகளவு சமையல் எரிவாயு சந்தைக்கு!

Posted by - February 20, 2026 0
எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கடந்த…

வட்டவளையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பாரவூர்தி – இருவர் படுகாயம்.!

Posted by - February 21, 2026 0
வட்டவளை பகுதியில் 20 அடி பள்ளத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று பிரதான…

இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் விடயம்: சுயாதீன சர்வதேச விசாரணை கோரிக்கை – யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தல்.!

Posted by - February 21, 2026 0
வடமராட்சி ஊடக இல்லம், ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயத்தில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என…

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு!

Posted by - February 20, 2026 0
வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கின் பல பகுதியில் தாளையடி…

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

Posted by - February 20, 2026 0
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *