சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி: காரணமான இருந்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – வேந்தன் கண்டனம்.!

428 0

மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லையைத் தாங்க முடியாமல், முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடனைச் செலுத்திய பின்னரும், சம்பந்தப்பட்ட கந்துவட்டி கும்பல் தொடர்ந்து பணம் கோரி மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,“தமிழ் மக்களின் இன விடுதலைக்கும் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும் எதிராக தமது இளமைக் காலத்தை முழுவதும் அர்ப்பணித்த முன்னாள் போராளிகள், இப்போது குடும்ப வாழ்க்கையில் கடுமையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


அன்றாட வாழ்வாதாரச் சுமையை தாங்கும் அளவுக்கு வருமானம் இல்லாத காரணத்தால், பலர் கடன் மற்றும் சீட்டு போன்ற வழிகளில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலையைச் சுரண்டி, வட்டி மேல் வட்டி விதித்து ஏமாற்றும் கந்துவட்டி கும்பல்கள் செயற்பட்டு வருகின்றன.


அதன் விளைவாகவே, மண்ணுக்காக போராடிய இந்தப் பெண் போராளி தனது சிறுநீரகத்தை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவமாகும்.கவலைக்குரிய விடயம்விடயம் என்னவென்றால், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த கந்துவட்டி கும்பலும் கைது செய்யப்படவில்லை. மாறாக, வறுமையால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியையே சமூகத்தின் ஒரு பகுதி விமர்சித்து வருகின்றது.


கடன் தொல்லையால் தமிழர் பகுதிகளில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு பெண்ணுக்கே நேர்ந்த துயரம் அல்ல; ஒவ்வொரு தமிழ் மற்றும் இலங்கை குடிமகனுக்கும் நேர்ந்த அவலமாகும்.எனவே, இச்சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த ஜனநாயக நாட்டில் கந்துவட்டி நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி, கந்துவட்டி இல்லாத நியாயமான சமூகத்தை உருவாக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஜனநாயக தமிழ்தேசிய மக்கள் கூட்டணி இணைத் தலைவராகவும் செயல்படும் வேந்தன், முன்னாள் போராளிகளின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துரிதமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Post

இங்கிலாந்து துணைப் பிரதமர் நாளை இலங்கை வருகை

Posted by - February 16, 2026 0
ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, நாளை (17)  இலங்கைக்கு ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். தனது விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி…

விபத்தில் சிக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கண்டி – பதியத்தலாவ வீதியில் மொரகஹமுல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 46 வயதுடைய நெதர்லாந்து…

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் தப்பியோட்டம்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்.!

Posted by - February 20, 2026 0
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கல்கிசை பொலிஸ் தலைமையகத்தின் காவலில் இருந்தபோது பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும்…

எவரையும் கைவிடாத செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் – புதுடில்லியில் அநுர அதிரடிப் பிரகடனம்

Posted by - February 19, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லியில் நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நெறிமுறைகள் மற்றும்…

இந்திய விஜயம் மட்டும் போதாது: மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – ரஞ்சித் மத்தும பண்டார.!

Posted by - February 21, 2026 0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மட்டும் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *