சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி: காரணமான இருந்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – வேந்தன் கண்டனம்.!

307 0

மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லையைத் தாங்க முடியாமல், முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடனைச் செலுத்திய பின்னரும், சம்பந்தப்பட்ட கந்துவட்டி கும்பல் தொடர்ந்து பணம் கோரி மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,“தமிழ் மக்களின் இன விடுதலைக்கும் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும் எதிராக தமது இளமைக் காலத்தை முழுவதும் அர்ப்பணித்த முன்னாள் போராளிகள், இப்போது குடும்ப வாழ்க்கையில் கடுமையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


அன்றாட வாழ்வாதாரச் சுமையை தாங்கும் அளவுக்கு வருமானம் இல்லாத காரணத்தால், பலர் கடன் மற்றும் சீட்டு போன்ற வழிகளில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலையைச் சுரண்டி, வட்டி மேல் வட்டி விதித்து ஏமாற்றும் கந்துவட்டி கும்பல்கள் செயற்பட்டு வருகின்றன.


அதன் விளைவாகவே, மண்ணுக்காக போராடிய இந்தப் பெண் போராளி தனது சிறுநீரகத்தை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவமாகும்.கவலைக்குரிய விடயம்விடயம் என்னவென்றால், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த கந்துவட்டி கும்பலும் கைது செய்யப்படவில்லை. மாறாக, வறுமையால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியையே சமூகத்தின் ஒரு பகுதி விமர்சித்து வருகின்றது.


கடன் தொல்லையால் தமிழர் பகுதிகளில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு பெண்ணுக்கே நேர்ந்த துயரம் அல்ல; ஒவ்வொரு தமிழ் மற்றும் இலங்கை குடிமகனுக்கும் நேர்ந்த அவலமாகும்.எனவே, இச்சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த ஜனநாயக நாட்டில் கந்துவட்டி நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி, கந்துவட்டி இல்லாத நியாயமான சமூகத்தை உருவாக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஜனநாயக தமிழ்தேசிய மக்கள் கூட்டணி இணைத் தலைவராகவும் செயல்படும் வேந்தன், முன்னாள் போராளிகளின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துரிதமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Post

தாமதித்தால் பாதிப்பு உங்களுக்கே – சஜித் அணிக்கு ஐ.தே.க. எச்சரிக்கை.!

Posted by - February 19, 2026 0
எதிர்வரும் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்த பலமான கூட்டணியாகவே எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் மற்றும்…

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை: காணிகள் விடுவிப்பதில் இழுபறி.!

Posted by - February 20, 2026 0
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பாக, கொழும்பில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைத் தொடங்கியபோதும், காணிகளை விடுவிப்பதில் இழுபறி தொடர்ந்து வருகிறது. ஜனாதிபதி அநுர…

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

Posted by - February 16, 2026 0
இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு…

ஜனாதிபதி அநுர – பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை.!

Posted by - February 20, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின் புதுடில்லியில்…

தங்க விலையில் மாற்றமில்லை: நகையக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.!

Posted by - February 20, 2026 0
உள்நாட்டுச் சந்தையில் இன்று தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *