பிரதமரின் தலைமையில் மாத்தறை கலை விழா கோலாகலமாக ஆரம்பம்.!

233 0

மாத்தறை – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் பல்வேறு கலைப்படைப்புகளை ஒருங்கிணைத்து நடக்கும் ‘மாத்தறை கலை விழா’ (Matara Festival for the Arts) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (பெப்ரவரி 19) மாத்தறைக் கோட்டை பழைய மேல் நீதிமன்ற வளாகத்தில் உத்தியோகபூர்வமாக தொடங்கியது.


பெப்ரவரி 20 முதல் 23ஆம் திகதி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் இக்கலை விழா, மாத்தறை பழைய மேல் நீதிமன்ற வளாகம் மற்றும் மாத்தறை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. விழாவில் காட்சிக் கலை கண்காட்சிகள், குறும்படத் திரையிடல்கள், கலைச் சந்தை மற்றும் துறைசார் நிபுணர்களால் வழிநடத்தப்படும் செயன்முறைப் பட்டறைகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.


ஆரம்ப விழாவில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜாபோல்ராஜ் உள்ளிட்ட கலைஞர்கள், விசேட விருந்தினர்கள் மற்றும் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related Post

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி

Posted by - February 16, 2026 0
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை…

ஜனாதிபதி அநுர – பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை.!

Posted by - February 20, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின் புதுடில்லியில்…

மீனவர்களுக்கு மீன்பிடி வலைத் தொகுதி வழங்கும் நிகழ்வு.!

Posted by - February 19, 2026 0
மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மன்னார் மாவட்ட கடற்றொழில்…

வடக்கு இளைஞர்களுக்கு வான்வழித் துறை வாய்ப்பு:பலாலியில் உயர்மட்டக் குழு முக்கிய கள விஜயம்!

Posted by - February 19, 2026 0
வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறையைப் பற்றிய கல்வியை ஊக்குவிப்பது நோக்கமாக, விசேட உயர்மட்டக் கலந்துரையாடலும், அதன்பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *