கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச விசாரணை கோரி 3287 நாட்கள் போராட்டம்.!

202 0

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (20.02.2026) காலை 10 மணியளவில் A9 வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர், முள்ளிவாய்க்காலில் நடந்த இன ஒடுக்குமுறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நீதியை பெறுவதற்கான போராட்டம் இன்றுடன் 3287 நாட்களாக தொடர்கிறது. இந்த போராட்டத்தில் பல தாய்மார்கள், உறவுகள் இறந்து விட்டனர்; மீதமுள்ளவர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான சரியான தகவல்களை அறிய முன்னெடுக்கும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றனர்.


போராட்டத்தில் கிளிநொச்சி டிப்போ சந்தியை கடந்து மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் போராட்டம் நிறைவடைந்தது. தங்களின் கோரிக்கைகள்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குசர்வதேச நீதி வழங்குதல், தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை, பயங்கரவாதம் தடுக்கும் சட்டங்கள்[P.T.A மற்றும் PSTA] நீக்கம், வட கிழக்கில் இராணுவ முகாம்கள் மூடப்படல், மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கு சர்வதேச நிபுணர்கள் தலையீடு, பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் நிறுத்தம், பெளத்த மயமாக்கல் நிறுத்தம், மற்றும் அனைத்து வகை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படல் ஆகியவை ஆகும்.போருக்குப் பிறகு 16 ஆண்டுகள் கடந்தும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் நீதி பெற முடியாமல் இருப்பதை நினைவூட்டி, சர்வதேச சமூகத்திடம் இச்சம்பவத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தப்படுகின்றது.

Related Post

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்.!

Posted by - February 20, 2026 0
துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது…

இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமர் முக்கிய சந்திப்பு.!

Posted by - February 20, 2026 0
அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான தீர்க்கமான இருதரப்புப் பேச்சுவார்த்தை இன்று வெள்ளிக்கிழமை…

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு!

Posted by - February 20, 2026 0
வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கின் பல பகுதியில் தாளையடி…

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

Posted by - February 16, 2026 0
இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *