அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்.!

107 0

இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) கீழ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவனம், மார்சேய் ஃபோஸ் துறைமுகம் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியப் பயணத்தின் போது கையெழுத்தான இந்த ஒப்பந்தம், இந்தியா–ஐரோப்பா வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு டெல்லி நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் அறிமுகமான IMEC வழித்தடம், கடல், ரயில், டிஜிட்டல் மற்றும் தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கும் பன்முகப் போக்குவரத்து திட்டமாகும். தடையற்ற வர்த்தகப் போக்குவரத்தை எளிதாக்குதல் மற்றும் துறைமுகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் இதன் நோக்கமாகும்.

ஒப்பந்தத்தின் படி, முந்த்ரா துறைமுகம் மற்றும் ஹசிராதுறைமுகம் இந்தியா–மேற்கு ஆசியா இணைப்புக்கான கிழக்கு நுழைவாயில்களாக அமையும்; மார்சேய் ஃபோஸ் துறைமுகம் ஐரோப்பாவிற்கான மேற்கு நுழைவாயிலாகச் செயல்படும். சுமார் 70 மில்லியன் டன் கூடுதல் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட இந்த இணைப்பு, இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

Related Post

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

Posted by - February 20, 2026 0
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக 33 பேர் கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் படை பணியமர்த்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து…

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

Posted by - February 16, 2026 0
பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளில் நிலவும் கடும் உறைபனி காரணமாக மெட் ஆபீஸ் (Met Office) புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு…

தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவு.!

Posted by - February 20, 2026 0
தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தஜிகிஸ்தானில் நேற்று இரவு 11.24 மணியளவில் 3.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில…

மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள் அமெரிக்கா பிரச்சினைகளை உருவாக்குகிறது எனக் கருத்து.!

Posted by - February 20, 2026 0
சமீபத்திய ஆய்வில், கனடாவில் பெரும்பான்மையானோர் அமெரிக்காவை கனடாவின் கூட்டாளர் அல்ல என்றும், ரஷ்யாவைவிட உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் கருதுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும்…

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து .!

Posted by - February 23, 2026 0
நேபாளத்தில் போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.நேபாளத்தில் இன்று (23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *